Monday, December 18, 2006

சென்னை சந்திப்பு - 1



தொடர்புள்ள இடுகைகள்:
1. தமிழ்நதி
2. அன்புடன் ச.சங்கர்
3. சிவஞானம்ஜி
4. மா. சிவகுமார்

சூடான செய்திகளுக்கு:

நாமக்கல் சிபி

26 comments:

SP.VR. SUBBIAH said...

படத்தில் உள்ளவர்களின் பெயரைக் கீழே குறிப்பிட்டிருக்கலாமே அம்மணி!

siva gnanamji(#18100882083107547329) said...

அட! வெள்ளைப்பனித்தலையன் நான் மட்டுமா? இருக்காது! சில புது"மை"களும் இருக்கலாம்!

வெற்றி said...

பொன்ஸ்,
படத்தில் உள்ளவர்களில் அருமை நண்பர் இராகவன் மற்றும் துளசி அம்மையார் அகியோரைத் தான் என்னால் அடையாளம் காண முடிந்தது. படத்தில் உள்ளவர்களுக்கு ஆட்சேபனை இல்லையெனின், அவர்களின் பெயர்களையும் படத்தின் கீழ் போடலாமே!

பொன்ஸ்~~Poorna said...

மஞ்சள் நிறத்தில் கோடு போட்ட சட்டை போட்டிருப்பவர் (கைதி உடை மாதிரி..) எங்கள் தல பாலபாரதி..

மற்றவர்கள் பெயரை நான் எழுத அனுமதி இல்லை. அவரவர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுவார்கள் என்று நம்புகிறேன்.

நாமக்கல் சிபி said...

இந்தப் படத்தில் நான் இல்லை!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மஞ்சள் நிறத்தில் கோடு போட்ட சட்டை போட்டிருப்பவர் (கைதி உடை மாதிரி..) எங்கள் தல பாலபாரதி..//

பொருத்தமான உடை :)

- யெஸ்.பாலபாரதி said...

//பொருத்தமான உடை :) //

ரசிகவ், யூ டூ..த்ரீ..ஃபோர்..
நற..நற..நற..

ஓகை said...

இடது புறமிருந்து மூன்றாவதாக பழுப்பு நிறச் சட்டையும் கண்ணாடியுமாக நின்று கொண்டிருக்கும் சிறுவன் ஓகை நடராஜன்.

Anonymous said...

சுனாமியார் எங்கே?

ச.சங்கர் said...

இடுகை சுட்டிக்கு நன்றி பொன்ஸ்...புகைப்படத்துக்கும்தான்....
யாராவது ஆவல் முற்றிப் போய் நான் எங்கே என்று கேட்டால் :))) அடையாளம் சொல்லலாம்...எனக்கு ஆட்சேபணை இல்லை :)))

அருள் குமார் said...

கைதி பாலாவின் பக்கத்தில், கருப்பு டி-ஷர்ட்டில், அவர் தப்பித்துப் போகாவண்ணம் பாதுகாப்பாய் அமர்ந்திருப்பது நான் :)

siva gnanamji(#18100882083107547329) said...

நான் முன்பே என்னை அடையாளங்காட்டி விட்டேன்.....
துளசிக்குப் பின்னால், கருநீலச்சட்டையில்,
கண்ணாடியுடன்,
தலை ஒளிர
நிற்பவன்
நானே...!

siva gnanamji(#18100882083107547329) said...

இடுகைச் சுட்டிக்கு நன்றி, பொன்ஸ்!

Anonymous said...

இந்த கமரா பொன்ஸையும் தமிழ்நதியையும் போட்டா எடுக்க மறுத்து விட்டது போலை..

Anonymous said...

ம்ம்ம்...

ஆரம்பிச்சிட்டிங்களா............

பல்வேறு சதி செய்து என்னை வரவிடாமல் செய்த மாம்ஸ் உள்ளிட்டவர்களை அந்த "திருச்சியில்" குடி கொண்டிருக்கும் ஆத்தா பார்த்துக்கொள்வார்.

( ச்சா... we miss you அப்படின்னு யாரவது ஒரு மெயில் போடுவாங்கனு பார்த்தேன், ம்கூகும் so sad :(((( )

Anonymous said...

என்னாதான் மண்டி போட்டு கெஞ்சினாலும் :P பாகசா தனது லட்சியங்களில் இருந்து பின் வாங்காது என்று அதன் தலைவர்களில் ஒருவன் என்கிற வகையில் தெரிவித்துக்கொள்கிறேன் :)))))))))

Anonymous said...

நான் ஏன் கலந்துகொள்ளவில்லைன்னு...இன்னொரு பதிவு போடனுமா...

உஸ்ஸ்ஸ்ஸ்....ம்ம்ம்ம்ம்

ஹி..ஹி...

பொன்ஸ்~~Poorna said...

சுப்பையா சார், பின்னூட்டத்துக்கு நன்றி :)

சிஜி, வெள்ளைப் பனித்தலையர் நீங்க மட்டும் தான்.. நாங்க எல்லாம் வெள்ளி முடியை உள்ளே வைத்து மறைச்சுகிட்டு வந்திட்டம்ல ;)
நீங்கள் சந்திப்பைப் பற்றி இன்னும் அதிகம் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.. இன்னும் ஒரு பதிவு எழுதுங்களேன்..

சிபி, ஹி ஹிஹி.. ஒரு சென்னை சந்திப்புக்கு, (கோவை பாகச சார்பில்) நீங்களும் வரலாமே..

பாகச புது மெம்பர் ரசிகவ்வுக்கு ஒரு ஓ ;)

ஓகை நன்றி,

சுனாமியார் பாசறை, உங்க சுனாமியாரை நிக்க வச்சி ஒரு படம் எடுத்தோம்.. ஆனா கணினியில் போடும் போது சுனாமி வேகம் தாங்காமல் அந்தக் கணினியே டவுன் ஆய்டிச்சு :(

//யாராவது ஆவல் முற்றிப் போய் நான் எங்கே என்று கேட்டால் //
சங்கர், யாரும் கேட்பதற்கு முன்னால் நானே சொல்லிடறேன் :) இந்த வார சிகப்புச் சட்டை சங்கர் :)

நன்றி அருள், பாதுகாத்ததற்குத் தான் ;)


சின்னக்குட்டி, நீங்கள் எங்களைக் காணவேண்டுமெண்டால் சென்னை வர வேணும் :)))

//( ச்சா... we miss you அப்படின்னு யாரவது ஒரு மெயில் போடுவாங்கனு பார்த்தேன், ம்கூகும் so sad :(((( )//
எங்க தானைத் தலைவர் வரவனையாரே! நீங்கள் இல்லாத ஒரு சந்திப்பு மிகவும் வருத்தமான விஷயம் தான்.. அது பற்றியும் நான், லக்கி, பாலா, ப்ரியன் எல்லாரும் பேசிக் கொண்டோம் (பாலா மிகவும் மகிழ்ச்சிக் குதியலோடுதான் பேசியிருப்பார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?! :) ) .. அதெல்லாம் அடுத்த பதிவில் :)

பங்காளி, விடுங்க விடுங்க.. போன முறை இன்கம் டாக்ஸ், இந்த முறை வாட் சம்பந்தமா ஏதும் டிஸ்கஷன்னு சொல்லிட்டா போச்சு ;)

Anonymous said...

ஈட்டிபாய்ந்திடினும் மார்பு காட்டிடும் சிங்கம்,எங்கள் குல தெய்வம்,நாட்டின் லட்சக்கணக்கான பா.க.ச. தொண்டர்களுக்கான ஒளிவிளக்கு பாலபாரதியை கீழே உட்கார வைத்ததை பா.க.ச.வின் கொட்டாம்பட்டி கிளை செயலாளர்(பதிவு எண் 638979/2006) என்ற முறையில் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்கிறேன்.

19-வதாக பிளிரும்,
ஆழியூரான்

siva gnanamji(#18100882083107547329) said...

பொன்ஸ் சொல்வது:
//...நாங்கள் எல்லாம் வெள்ளிமுடியை உள்ளே வைத்து
மறைச்சிகிட்டு வந்திட்டம்லே..//

எனக்குத் தெரியாதா? அதான், "சில
புது"மை"(Dye)களும் இருக்கலாம்"னு
சொன்னோம்ல!

நன்றி!

siva gnanamji(#18100882083107547329) said...

பொன்ஸ் சொல்வது:
//...இன்னும் ஒரு பதிவு எழுதுங்களேன்.//

நன்றி பொன்ஸ்!
இது என்னால் இப்பொழுது இயலாது.நன்பர்கள் பதிவிடட்டும்...

ப்ரியன் said...

/*அவரவர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுவார்கள் என்று நம்புகிறேன்*/

நான் : நிற்கும் வரிசையில் இடமிருந்து நாலாவது (சிவப்பு கோடுபோட்ட சட்டை - பாலாவின் தலைக்கே மேலே நேரே)

அருள் குமார் said...

//சிவப்பு கோடுபோட்ட சட்டை//

கட்டம் போட்ட சட்டை என்று சொல்வதே சரியாக இருக்கும் ப்ரியன்!

கார்மேகராஜா said...

வலைபதிவர் சந்திப்பு முடிஞ்சிருச்சா?
என்னைக்கு? சொல்லவே இல்ல!

G.Ragavan said...

படமும் போட்டாச்சு...தகவலும் போட்டாச்சு...இன்னும் ஒவ்வொன்னாப் பாத்துப் படிக்கனும். மொத்தத்தில் சந்திப்பு சிறப்பாக நடந்தது.

தமிழ்நதி said...

சிவப்பு சல்வாருடன் நிற்பது நீங்களா என்று நிறையப் பேர் கேட்டுவிட்டார்கள். எனக்கு சிக்குன் குனியா போல ‘போட்டோ குனியா’. அதாவது புகைப்பட ஒவ்வாமை உண்டு. அதனால் புகைப்படக் கருவியைக் கண்டால் ஓடி ஒளிந்துகொள்வேன். பொன்சுக்கும் அந்த ஒவ்வாமை இருக்கிறதென்று நினைக்கிறேன். போட்டோவில் நிற்பவர்களில் ஒருவர் துளசி அக்கா மற்றவர்…. ம்… சொல்ல அனுமதியில்லை. வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.