Wednesday, September 06, 2006

ரகசியக் குறிப்பு



கவிதைக்குள்
மறைத்துக்
கொள்கிறேன் என்னை..

சொல்ல விரும்பாமல்,
தயங்கித் தயங்கி
மறைக்கும்
ரகசியங்களைக்
கண்டுபிடித்து விடுவாயோ என்று..

35 comments:

ப்ரியன் said...

/*
கவிதைக்குள்
மறைத்துக்
கொள்கிறேன் என்னை
*/

ம்ம்ம் நல்ல கவிதை பொன்ஸ்

Anonymous said...

பொன்னம்மா அக்கா,

மிக அருமை....மெய்யாலுமெ...சொந்த சரக்கு தானா?....

பொன்ஸ்~~Poorna said...

//சொந்த சரக்கு தானா?.... //
ஹையோ ஹைய்யோ.. (கைப்பு ஸ்டைலில் படிக்கவும்:) )

ILA (a) இளா said...

//கவிதைக்குள்
மறைத்துக்
கொள்கிறேன் //

நல்ல கவிதை பொன்ஸ்

Anonymous said...

பொன் ராஜம் அப்படின்னு மதுரை ஆப்டெக்-ல ஒருத்தர் வெல பார்த்தாக...தெரியுமா?...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///கவிதைக்குள்
மறைத்துக்
கொள்கிறேன்///

ஏங்க உங்க கவிதைகளை நீங்கள் யாரிடம் உங்கள் ரகசியங்களை மறைக்கறீங்களோ அவர் படிக்க மாட்டாரா?

இல்லை கவிதையையும் மறைத்து விடுவீங்களா?

இல்லை கவிதை படித்து தெரிந்து கொள்ளட்டும் என்ற ஆசையா?

உங்களோட புது பொரோபைலில் இருக்கும் டான்ஸிங் கேர்ள் பற்றி கவிதையை எதிர்பார்க்கிறேன் :-))).

நாமக்கல் சிபி said...

//உங்களோட புது பொரோபைலில் இருக்கும் டான்ஸிங் கேர்ள் பற்றி கவிதையை எதிர்பார்க்கிறேன் //

அட அவங்களே நாக்கை நீட்டி பயமுறுத்துறாங்க! நீங்க வேற கவிதை கேட்டுகிட்டு!

G Gowtham said...

கவிதைக் கண்ணாமூச்சி!
நிறைய விஷயங்களை சொல்லாம சொல்லவைக்குது!

- யெஸ்.பாலபாரதி said...

கவிதாயினி பொன்ஸுக்கு..
//கவிதைக்குள்
மறைத்துக்
கொள்கிறேன் என்னை..//
இது ஓகே...

//சொல்ல விரும்பாமல்,
தயங்கித் தயங்கி
மறைக்கும்
ரகசியங்களைக்
கண்டுபிடித்து விடுவாயோ என்று..//
கண்டி பிடிக்கவேண்டுமென்றுதானே இதை எழுதியதாக படுகிறது...
எனிவே..
வாழ்த்துக்கள்..,
புதிய அவதாரத்துக்கு!

மனதின் ஓசை said...

ரொம்ப சின்ன கவிதையா இருக்கே.. மறைன்சுக்க முடியுமா?

ப்ரியன் said...

/*உங்களோட புது பொரோபைலில் இருக்கும் டான்ஸிங் கேர்ள் பற்றி கவிதையை எதிர்பார்க்கிறேன் :-))).


Wed Sep 06, 01:29:11 PM 2006 மணிக்கு, எழுதியவர்: குமரன் எண்ணம்*/

என்ன பொன்ஸ் குமரன் கவிதை கேட்டதினாலே படத்தை மாத்திடீங்களா?நாய் குட்டி அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுது?

G.Ragavan said...

அருமை அருமை மிக அருமை

நாமக்கல் சிபி said...

படகு இருந்தப்போ படகு அக்கான்னு கூப்பிட்டோம்! இப்ப என்னான்னு கூப்பிடறதாம்?

:-)

அருள் குமார் said...

மனதை ஈர்த்த கவிதை பொன்ஸ். ரொம்ப நல்லா இருக்கு.

//ரொம்ப சின்ன கவிதையா இருக்கே.. மறைன்சுக்க முடியுமா?//

நியாயமான கேள்விதானே!

பட்டணத்து ராசா said...

again a good one from you :-)

Porkodi (பொற்கொடி) said...

யானைல இருந்து பாய்மரம்.. பாய்மரத்தில இருந்து ஆடும் பெண்.. ஹும்ம்ம்.. ரகசிய குறிப்பு யாருக்கு போய்ட்டிருக்கு??

பொன்ஸ்~~Poorna said...

ப்ரியன், அனானி, இளா, காண்டீபன், கௌதம், ராகவன், அருள், பட்டணத்து ராசா, நன்றி...

//பொன் ராஜம் அப்படின்னு மதுரை ஆப்டெக்-ல ஒருத்தர் வெல பார்த்தாக...தெரியுமா?... //
அனானி, மதுரைக்காரய்ங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்..

செந்தில்குமரன்,
//ஏங்க உங்க கவிதைகளை நீங்கள் யாரிடம் உங்கள் ரகசியங்களை மறைக்கறீங்களோ அவர் படிக்க மாட்டாரா? //
படிக்கத் தாங்க இந்தக் கவிதையும்..

//இல்லை கவிதை படித்து தெரிந்து கொள்ளட்டும் என்ற ஆசையா?// :)

// உங்களோட புது பொரோபைலில் இருக்கும் டான்ஸிங் கேர்ள் பற்றி கவிதையை எதிர்பார்க்கிறேன் :-))). //
கவிதை ஒன்றும் தோன்றாத காரணத்தால், நாய்க்குட்டி வந்துடுச்சு அங்க.. :) நாயைப் பற்றித் தமிழ்மணத்தில் எழுத இனிமேல் ஏதும் இருக்கா என்ன? ;)
//

பொன்ஸ்~~Poorna said...

//அட அவங்களே நாக்கை நீட்டி பயமுறுத்துறாங்க! நீங்க வேற கவிதை கேட்டுகிட்டு! //
சிபி, உங்க அமானுஷ்ய சனிக்குப் போட்டியா இருக்க வேணாம்னு.. மாத்திட்டேன் :)

பாலா,
//கண்டி பிடிக்கவேண்டுமென்றுதானே இதை எழுதியதாக படுகிறது...// :)

மனதின் ஓசை,
//ரொம்ப சின்ன கவிதையா இருக்கே.. மறைன்சுக்க முடியுமா? //
:))) யாரிடம் இருந்து மறைய முயல்கிறோம் என்பதைப் பற்றிய விஷயம் இல்லையா அது? என்ன அருள்?! :)

//எல்லா கவிதையிலும் விழயத்தை சொல்ல ஏன் பயப்படுறாங்க? //
பட்டாம்பூச்சி, அது பயமில்லை.. வெட்கம்?, தயக்கம்?

பொன்ஸ்~~Poorna said...

//என்ன பொன்ஸ் குமரன் கவிதை கேட்டதினாலே படத்தை மாத்திடீங்களா?நாய் குட்டி அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுது? //
ப்ரியன், உங்களுக்குப் பதில் முன்னமே சொல்லியாச்சு :) மௌல்ஸ் வேற நாய் நல்லா இருக்குன்னு சொல்லிட்டார் :)

பொற்கொடி
// ரகசிய குறிப்பு யாருக்கு போய்ட்டிருக்கு?? // :)) யாருக்குன்னு கண்டுபிடிங்க பார்ப்போம் :)

பொன்ஸ்~~Poorna said...

சதயம்,
//கவிதைக்குள்
மறைந்து
கொல்கிறேன்...உன்னை..
//
வேணா வரலாம் :))

இராம்/Raam said...

பொன்ஸ்,

நல்லா இருக்குங்க வரிகள்.... அழகாவும் எதார்த்தமாகவும்...

வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

படகில் இருந்து பப்பிக்கு(நாய்க்குட்டி) மாறியதால் இன்றிலிருந்து படகு அக்கா அவர்கள் பப்பியக்கா என்று அழைக்கப்படுவார்.

வரவனையான் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கவிதை படிக்க கிடைத்ததில் மகிழ்கிறேன்

இராம்/Raam said...

பப்பியக்காவிற்கு வாழ்த்துக்கள்..... :-)

Udhayakumar said...

முந்தீட்டீங்களே :-( பரவாயில்லை, நானும் போடுவேன்...

வலைஞன் said...

//சொல்ல விரும்பாமல்,
தயங்கித் தயங்கி
மறைக்கும்
ரகசியங்களை//

இதில் சென்னை வலைப்பதிவர் மாநாடும் சேருமோ?

சங்கத்துக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் மாநாட்டில் கலந்து கொண்டதோடு அதைப்பற்றி இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் மறைத்து வருகிறீர்கள்.

மாநாட்டு ரகசியங்களை வெளியிடாமல் மறைத்தால் சங்கத்துக்கு நாங்கள் வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டி வரும் என கூட்டணிக் கட்சி என்ற முறையில் சங்கத் தலைவிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

இப்படிக்கு
வ வா சங்கத்துக்கு
வெளியிலிருந்து ஆதரவளிக்கும்
கூட்டணிக்கட்சிகள்

வெற்றி said...

பொன்ஸ்,
கவிதை அருமை. ஆனால் 3 தடவைகள் படித்தும் பொருள் விளங்கவில்லை.

கைப்புள்ள said...

வழக்கம் போல மிகவும் நல்லாருக்கு. எப்படித் தான் இந்த கவிஞர்களெல்லாம் இப்படி எழுதுறாங்கன்னு பல சமயம் மலைப்பா இருக்கும்...இருக்குது.

பொன்ஸ்~~Poorna said...

ராம், செந்தில், கைப்புள்ள, நன்றிகள் பல :)

உதய், என்னங்க போடப் போறீங்க?

வலைஞன்,
//
இதில் சென்னை வலைப்பதிவர் மாநாடும் சேருமோ?
//
அது சரி.. :) கூட்டணி கட்சி ஓகே.. பை த பை, நீங்க எந்தக் கூட்டணியில் இருக்கீங்க? நானே இப்போ வ.வா.சவுக்கு வெளியிலிருந்து தான் ஆதரவு கொடுத்துகிட்டிருக்கேன் தெரியுமா? :)

வெற்றி,
பொருள்: அது ஒரு ரகசியம். அதைச் சொல்ல விருப்பமில்லை. விடுகதை போன்றதொரு கவிதையாகத் தருகிறேன். புரிந்து கொள்வது நண்பன் பாடு.. ரகசியம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், நண்பர்களிடம் நேரில் கூறத் தயங்கும் எதுவாக வேண்டுமானாலும்..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
வெற்றி,
பொருள்: அது ஒரு ரகசியம். அதைச் சொல்ல விருப்பமில்லை. விடுகதை போன்றதொரு கவிதையாகத் தருகிறேன். புரிந்து கொள்வது நண்பன் பாடு.. ரகசியம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், நண்பர்களிடம் நேரில் கூறத் தயங்கும் எதுவாக வேண்டுமானாலும்..
///

என்னங்க கோனார் உரை மாதிரி எழுதி இருக்கீங்க? படிச்சுட்டு சிரிச்சுட்டேன் :-)))))).

வலைஞன் said...

//கூட்டணி கட்சி ஓகே.. பை த பை, நீங்க எந்தக் கூட்டணியில் இருக்கீங்க? //

பா க ச

//நானே இப்போ வ.வா.சவுக்கு வெளியிலிருந்து தான் ஆதரவு கொடுத்துகிட்டிருக்கேன் தெரியுமா//

அது எப்படிங்க கட்சியோட முக்கியமான தலைவி கட்சிமாறி வெளியிலிருந்து ஆதரிப்பதா? மக்களே கேட்டுக்குங்க சங்கத்தின் தங்கத்தலைவி கட்சி மாறிய விவரம் இது வரை தெரியாதவர்கள் அறிந்து கொள்க.

சென்ஷி said...

/கவிதாயினி பொன்ஸுக்கு..
//கவிதைக்குள்
மறைத்துக்
கொள்கிறேன் என்னை..//
இது ஓகே...

//சொல்ல விரும்பாமல்,
தயங்கித் தயங்கி
மறைக்கும்
ரகசியங்களைக்
கண்டுபிடித்து விடுவாயோ என்று..//
கண்டி பிடிக்கவேண்டுமென்றுதானே இதை எழுதியதாக படுகிறது...
எனிவே..
வாழ்த்துக்கள்..,
புதிய அவதாரத்துக்கு! //

கவிதை சூப்பர்

சென்ஷி

SP.VR. SUBBIAH said...

ஜனவரி 24ற்குப் பிறகு 13 நாட்களாக
உங்களைப் பதிவில் பார்க்க முடியவில்லையே அம்மணி (சகோதரி)
கவிதைக்குள் மறைந்து விட்டதுதான்
அதற்கும் கார்ரணமா?
இல்லை வேலைப் பளுவா?
Power Pointல் போட்ட படமா?

சேதுக்கரசி said...

நல்லாருக்கு பொன்ஸ்.. நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா :-)

Anonymous said...

பொன்ஸ்,
நல்லா இருக்கே...:) வாழ்த்துக்கள்