Sunday, April 23, 2006

வ.வா.ச. அறிக்கை??!!




யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

வேண்டின் உண்டாகத் துறக்கத் துறந்தபின்
ஈண்டு இயற்பால பல

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு..

23 comments:

பெருசு said...

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பாத்துகிட்டே இருங்க! கைப்பு எவ்வளவு பெரிய ஆளுன்னு
தெரியாம மோதறாங்க

கைப்புள்ள dijo...
லத்தீன் அமெரிக்காவுல தமிழா? அதுவும் அங்க ஒங்க கனவுல நான் வந்தேனா? புல்லரிக்க வைக்கிறீங்களே பெருசு? ஆமா பெருல என்ன பண்றீங்க...எங்க இருக்கீங்க...நமக்கு வேண்டப்பட்ட பய தான் அந்த நாட்டு ப்ரெசிடெண்டா இருக்கான். எதாச்சும் தேவைன்னா என் பேரை சொல்லுங்க...எனக்காக எதுவேணா செய்வான்.

பெட்டி (சூட்கேஸ்) தயார். கண்டெய்னர்லெ வரப் போகுதுங்க

பெருசு said...

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பாத்துகிட்டே இருங்க! கைப்பு எவ்வளவு பெரிய ஆளுன்னு
தெரியாம மோதறாங்க

கைப்புள்ள dijo...
லத்தீன் அமெரிக்காவுல தமிழா? அதுவும் அங்க ஒங்க கனவுல நான் வந்தேனா? புல்லரிக்க வைக்கிறீங்களே பெருசு? ஆமா பெருல என்ன பண்றீங்க...எங்க இருக்கீங்க...நமக்கு வேண்டப்பட்ட பய தான் அந்த நாட்டு ப்ரெசிடெண்டா இருக்கான். எதாச்சும் தேவைன்னா என் பேரை சொல்லுங்க...எனக்காக எதுவேணா செய்வான்.

பெட்டி (சூட்கேஸ்) தயார். கண்டெய்னர்லெ வரப் போகுதுங்க

- யெஸ்.பாலபாரதி said...

தோட.. குறள்...
ஆத்தா... நெசமாகவே நீங்க "ஆளினால்-தான்!"
ரொம்ப பயமாகீது...
:(

சாணக்கியன் said...

// வ.வா.ச. அறிக்கை??!! //

not able to understand. Can you expand?

Also, if you can give meanings to the kuRaLs that would be great

பொன்ஸ்~~Poorna said...

//வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.//

பெருசு, நான் இதை விட்டுட்டேன்.. இதையும் போட்டிருக்கணும்... நீங்க போட்டதுக்கு நன்றி.. இந்தக் கைப்பு கனவுல வந்த கதை எல்லாம் இனி கச்சேரில போய் சொல்லுங்க, தம்பி தேவ் மகிழ்வாரு...

பொன்ஸ்~~Poorna said...

பாலா,
நீங்க வேற. இது சும்மா தமாஷ் :)

சாணக்கியன்,
இதெல்லாம் நீங்க கண்டுக்காதீங்க..
இப்போ இருக்கற அரசியல் கட்சி எல்லாம் கிண்டல் பண்ணி ஏதோ அறிக்கை விட்டுகிட்டு இருந்தோம்.. இந்தப் பதிவோட முடிச்சிக்கறேன்னு சொல்லத் தான் இது...
முழு டீடெய்ல்ஸ் வேணும்னா, இங்க பாருங்க

பொன்ஸ்~~Poorna said...

அரையணா, எனக்கு வேணுங்க.. :) சும்மா படம் போட்ட வருதான்னு பார்த்தேன்.. டெஸ்டிங் :)

ஜொள்ளுப்பாண்டி said...

யக்கா பொன்ஸக்கா என்னாக்கா இது ?

"சிங்காரி சரக்கு
நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு
இருக்கு கிக்கு எனக்கு"

என்ற சிங்காரத்தமிழிலே நம் தொண்டர் படை திளைத்திருக்க ஆசிரியப்பா பாராய் என்று என் தமிழைய்யா special class ல் முழங்கியது ஞாபகம் வருதே !!

என்ன இது கோலம் ! 'ஆசிரியப்பா'வில் கொஞ்சம் திளைத்திருங்கள் நான் நம் தொண்டர்படையோடு ஏதேனும் ஆ'சிறியBar' தென்படுகிறதா எனப் பார்த்துவிட்டு வருகிறேன் !!

அப்பா ரெண்டு வாரமா ஒரே ரகளையக் கெளப்புனமா ?அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு ! தப்பா நெனச்சுக்காதீங்க என்ன?

பொன்ஸ்~~Poorna said...

தம்பி.. நீ பார் தேடிப் போகிறேன் என்கிறாய்.. அன்பர் சிபியோ எதிரி முகாமுக்கே போய்விட்டார்..

என்னைக் கேட்டா, கட்சிய கலைச்சுட்டு, புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சிடலாம்.. முன்னயே சொன்ன மாதிரி, வாலிபர்களை வருத்தப்பட வைக்கும் சங்கத்தைப் பத்தி யோசனை இருக்கு ;)

சரி.. அக்கா ஆசிரியப்பா எழுதப் போறேன்.. நீ உன் கடமையைப் 'பாரு'..

கவிதா | Kavitha said...

பொன்ஸ், இது ஞாயமா?..தமிழ்ல என்னவோ எழுதி இருக்கீங்கன்னு புரியுது, ஆனா என்னன்னுதான்.. அனித்துகுட்டிய அனுப்புறேன் உங்களுக்கு குறள் எழுத உதவி செய்ய அவதான் சரியான ஆள்..

ஜொள்ளுப்பாண்டி said...

பொன்ஸக்கா தளபதி சிபி பமக விற்கு சென்றுவிட்டதாக வரும் செய்தி வெறும் வதந்தியே! கவலைப்பட்டு வாலிபர்களை வருந்தவைக்கும் முடிவினை தயவுசெய்து எடுத்துடாதீங்க! அண்ணன் சிபியோட official comment அது இல்லை என்பது திண்ணம். யாரோ மூன்றாம்படை வேலையை தளபதி சிபியின் பெயரில் செய்திருக்கிறார்கள் என்பது அண்ணன் அந்த பின்னூட்டதிற்கு backup கொடுக்காததிலிருந்தே தெரியவில்லையா?(check comments of sibi ) ok?

கவலையின்றி வெண்பா புணையுங்கள் ! வெல்க தமிழ் !

பொன்ஸ்~~Poorna said...

கவிதா..
அணில் எல்லாம் வேண்டாம் கவிதா.. உங்க வீட்ல இருக்கும்போதே இந்தப் பாடு படுத்துது.. எங்க வீட்டுக்கு வேற வந்தா.. அவ்ளோதான்.. ஏதோ. இதுவரைக்கும் திட்டு வாங்காம ப்ளாக்ல காலம் தள்ளிட்டேன்.. அனிதா வந்தா அம்போ தான்.. அப்டியே ரெண்டு கொய்யாப் பழம் வாங்கிக் குடுத்து அங்கயே வச்சிக்குங்க.. :)

பொன்ஸ்~~Poorna said...

கண்ணத் தொறந்தியே பாண்டி..
இதுக்குத் தான் இப்படி ஒரு அறிவாளி கழகத்துல இருக்கணும்ங்கறது.. எலிக்குட்டி சோதனையில் அது சிபியின் பின்னூட்டமாய் இருக்காது என்பது தெளிவாகிறது..

//கவலையின்றி வெண்பா புணையுங்கள் ! வெல்க தமிழ் ! //
வெண்பா இல்லை தம்பி.. ஆசிரியப்பா.. புனைந்துவிட்டேன்.. பார்க்கவும்..

பகைவரின் பாசறையில் சென்று இதைப் பரப்பும் பொறுப்பையும் உன்னிடமே பணித்து விட்டேன்..
(எவ்ளோஓஒ ப?!!!)

நன்மனம் said...

பொன்ஸ்,

//வாலிபர்களை வருத்தப்பட வைக்கும் சங்கத்தைப் பத்தி யோசனை இருக்கு ;)//

இது என்ன ப.ம.க மாதிரி!!! ஒன்னுமே புரியல, கொஞ்சம் விலாவாரியா சொன்னா சேர்றதுக்கு சுலுவா இருக்கும்.

ஸ்ரீதர்

Unknown said...

சங்கத்தின் மூளை என இனி தம்பி பாண்டி அழைக்கப்படுவான்.... தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பார்கள் கைப்புவின் பாசமிகு தம்பி பாண்டியே காகிதப் புலிகளின் புளுகு பலூன்களில் ஊசி குத்திய வீரம் குறித்து அக்கா பொன்ஸ் தனி வெண்பாவே பாடுவார்...

வெட்டிப்பயல் said...

//வாலிபர்களை வருத்தப்பட வைக்கும் சங்கத்தைப் பத்தி யோசனை இருக்கு ;)//

//ஒன்னுமே புரியல, கொஞ்சம் விலாவாரியா சொன்னா சேர்றதுக்கு சுலுவா இருக்கும்.//


ஸ்ரீதர், இதுல புரிய என்ன இருக்கு!
பொண்ணுங்க (பொன்னுங்க இல்லை) ஆரம்பிக்கற கட்சி எப்படி இருக்குமாம்?

வாலிபர்களை வருத்தப்பட வைக்கறதுதான அவங்க நோக்கமே!

பொன்ஸ்~~Poorna said...

பார்த்தி.. போதும்.. இதோட போதும்...

நிறுத்திடு.. எல்லாத்தையும் நிறுத்திடு.. :)

நாமக்கல் சிபி said...

ஏன்! ஜொள்ளுப் பாண்டிக்கு கண்டுபிடிப்புத் திலகம்னே பட்டம் கொடுக்கலாமே!

இலவசக்கொத்தனார் said...

என்னங்க? உங்க ஆசிரியப்பா அணித் தலைவி போஸ்ட் காலியா இருக்கே? இன்னும் ஓலை வந்து சேரலையே.

பொன்ஸ்~~Poorna said...

//ஏன்! ஜொள்ளுப் பாண்டிக்கு கண்டுபிடிப்புத் திலகம்னே பட்டம் கொடுக்கலாமே! //

அதை விட நல்ல பட்டம் எங்கள் தல ஏற்கனவே சொல்லிவிட்டார்.. பாண்டி இனிமேல், கண்டுபிடிப்பாண்டி என்னும் கருத்தான பெயரால் அழைக்கப்படுவார்..

பொன்ஸ்~~Poorna said...

//உங்க ஆசிரியப்பா அணித் தலைவி போஸ்ட் காலியா இருக்கே? //

ஆசை காமிச்சி, சே, ஆசிரியப்பா காமிச்சி ஏமாத்திட்டீங்க.. நானே பாடிட்டேன்.. புதுப் பதிவ பாருங்க..

தருமி said...

அது சரி, கீழ தான் எதோ புரியாம எழுதி இருக்கிங்க, மேல என்னா சம்பந்தமில்லாம ஒரு படம்.

அரையணா Tue Apr 25, 06:48:05 AM 2006மணிக்கு, எழுதியவர்: //

- ஓ! இப்படி ஒரு பின்னூட்டம் உங்களுக்கு வந்ததாலே என் பதிவுக்கு வந்து - உங்களுக்கு வந்ததை எனக்கு pass பண்ணிட்டீங்களா? அப்டிப்போடுங்க!

பொன்ஸ்~~Poorna said...

// இப்படி ஒரு பின்னூட்டம் உங்களுக்கு வந்ததாலே என் பதிவுக்கு வந்து - உங்களுக்கு வந்ததை எனக்கு pass பண்ணிட்டீங்களா? //
ஹி ஹி... :)