Thursday, July 27, 2006

வாத்தியாருக்காக - விட்டுப் போன யானைகள்




___________________________________________________

கிழக்கும் மேற்கும்

நாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...



ஓட்டு போடாதவர்களை ஓட்டுவதா?



தோல்வியதிகாரம்

The Matrix -- ஒரு தேடலின் கதை

அண்டார்டிகாவின் சதி


சொர்க்க வாசம் முடிந்தது!

"குட்டி" நயன்தாரா

சொந்த செலவுல சூனியம்!!!

இளவஞ்சி வாத்தியார் படம் பிடிக்காம விட்டுப் போன யானையைப் போடலாம்னு தான் வந்தேன்.. ஆனா, நானும் ஊர்விட்டு ஊர்வந்து சொந்தக்காரவங்களைப் பார்த்தேன்னு பின்ன எப்படிச் சொல்றதாம்?! அதான் மத்தவங்களையும் போட்டாச்சு..

இந்தப் போட்டோவுக்கெல்லாம் என்ன கமென்ட் கொடுக்கலாம்னு யோசிச்சா, ஒண்ணும் சட்டுன்னு தோணலை.. சரின்னு தமிழ்மணத்தில் இன்று வந்த இடுகைகளின் தலைப்பை எடுத்து கொடுத்தாச்சு.. உள்ளே என்ன இருக்குன்னு நான் படிக்கலை.. ஏதாச்சும் இடுகையோட உள்ளடக்கம் பத்தி விவகாரமா கேட்டா நான் எஸ்கேப்..

எல்லாம் சரிதான், யானைக்கு மட்டும் ஏன் கமென்ட் இல்லைன்னு கேட்கறீங்களா? யானையை எல்லாம் கமென்ட் அடிக்க மனசு வரலை. பொதுவா விசாரிச்ச வகையில் என் ப்ரோபைலில் இருக்கும் யானையை எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிச்சிருக்காம். ஆக, யானைகள் குட்டி தேவதைகளுக்குப் பிரியமானவை (அட என்னையும் சேர்த்து தான் ;) ).. கமென்ட் அடிச்சா தேவதை சாபத்துக்கு ஆளாய்டுவீங்க ;)

47 comments:

அருள் குமார் said...

புகைப்படங்களெல்லாம் நல்லாவே எடுத்திருக்கீங்க. பாராட்டுக்கள்.

//என் ப்ரோபைலில் இருக்கும் யானையை எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிச்சிருக்காம்.//
ஆமாமாம், எனக்கும் தான்;)

இயற்கை நேசி|Oruni said...

சரி படமெல்லாம் நல்ல வந்திருக்கே என்ன கேமரா பயன்படுத்தினீங்க. எனக்கு முன்னமே முந்திகிட்டீங்க. ஆனா, ஒண்ணு, நீங்க "சூ" (Zoo)ல இருக்கும் பொழுது இந்த "நேசி" நினைவில் வந்து ஊஞ்சலாடி இருப்பானே... அதுவும் அந்த ஒரங்குட்டானை பார்த்தவுடன்...
;-))

Udhayakumar said...

மில்வாக்கீ மிருகாட்சி சாலைக்கு இந்த வார இறுதியில் டிக்கெட் குடுக்க ஆள் வேணும்... யாரவது வெட்டியா இருந்தா வர்ரிங்களான்னு எங்க கிளையண்ட் கேட்டாங்க. சும்மா வத வதன்னு எல்லா பயலும் பேரு குடுத்துட்டாங்க. மீட்டிங் முடிஞ்சு நிதானமா என்னையும் சேர்த்துக்கறது ந்னு கேட்டா நீ வேணா அடுத்த வாரம் குடுன்னாங்க... புதுச ஒரு மிருகத்தை மத்த மிருகத்துக்கு பார்க்க கொடுத்து வைக்கலைன்னு சொன்னேன். அப்போ நீ அடுத்த வாரமும் வர வேணாம்னுட்டாங்க... பொல்லாத உலகமப்பா... பேச்சு சுதந்திரமே இல்லை...

பொன்ஸ்~~Poorna said...

//புகைப்படங்களெல்லாம் நல்லாவே எடுத்திருக்கீங்க. பாராட்டுக்கள்.//
நான் எடுக்கலீங்க அருள்.. கேமிரா கூட வந்த நண்பனோடது.. எடுத்ததும் அவன் தான்.. என் கேமிரா, நான் எடுத்த படம் எல்லாம் இன்னொரு நாள் போடறேன்..
//ஆமாமாம், எனக்கும் தான்;) //அது சரி.. ப்ரொபைலில் குழந்தை படம் போட்டா நீங்களும் குழந்தைன்னு ஒப்புக்கணுமா? ;)

//படமெல்லாம் நல்ல வந்திருக்கே என்ன கேமரா பயன்படுத்தினீங்க// தெரியலை நேசி.. Canonன்னு நினைக்கிறேன்..
//நீங்க "சூ" (Zoo)ல இருக்கும் பொழுது இந்த "நேசி" நினைவில் வந்து ஊஞ்சலாடி இருப்பானே...// பட்டாம்பூச்சிப் பண்ணைன்னு பூச்சிகளைப் பிடிச்சி ஒரு கண்ணாடிச் சிறையில் வச்சிருந்தாங்க. அதைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.. :(

//பேச்சு சுதந்திரமே இல்லை... //
உதய், பேசாம இந்த மிருகக் காட்சி சாலைக்குப் போய்டுங்க.. அங்க நல்லா பேச்சு சுதந்திரம் இருக்கு ;)

Nakkiran said...

சம்மருக்கு இதமான புகைப்படங்கள்
:)

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ், யானைகளும் மற்றவர்களும் ப்ரமாதம்.

உங்க யானை கொஞ்சம் ஓடரதை நிறுத்திட்டுத் தன் குடும்பத்தைப் பார்த்து இருக்கும் என்று நம்புகிறேன்.

பேரு வைங்கப்ப்பா கணேசனுக்கு.

துளசி கோபால் said...

பிடிச்சிருக்கு.

நாமக்கல் சிபி said...

குட்டி நயன்தாரா படம் நல்லா இருக்குங்க பொன்ஸ்!

கைப்புள்ள said...

படம் எல்லாம் நல்லா வந்துருக்கு பொன்ஸ். நீங்க உங்க பொட்டியிலேருந்து எடுத்து போடுற மொதப் படம் யானையாத் தான் இருக்கும்னு நெனச்சேன். கரெக்டா அதே மாதிரி நடந்துடுச்சு.
:)

ஆமா என்ன பொட்டி வாங்குனீங்க?

நன்மனம் said...

நல்ல படங்கள். நல்ல வார்புரு.

Santhosh said...

//குட்டி நயன்தாரா படம் நல்லா இருக்குங்க பொன்ஸ்! //

சிபி ஆனாலும் உங்களுக்கு தங்கச்சி பாசம் ரொம்ப அதிகம்...

மனதின் ஓசை said...

//குட்டி நயன்தாரா படம் நல்லா இருக்குங்க பொன்ஸ்! //

அர்ச்சுனனுக்கு அம்பு எறியும்பொழுது பறவையின் கண் மட்டுந்தான் தெரிந்தது என படித்து இருக்கிறேன்.. அது போல சிபிக்கு எப்போதும் நயந்தார மட்டும் தான் தெரிவார் போல..

அருள் குமார் said...

//நான் எடுக்கலீங்க அருள்..//
புகைப்படமெல்லாம் பாத்தப்போவே மைல்டா ஒரு டவுட் வந்துச்சி :)
சரி சரி.. அந்த பாராட்டுக்களை உங்கள் நண்பருக்கு fwd செய்துவிடுங்கள்.

Unknown said...

ஆகா இதைத் தான்...
இதையேத் தான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தோம்... பின்னிட்டீங்க பொன்ஸ் :)

ilavanji said...

படமெல்லாம் நல்லாத்தான் இருக்கு!

நீங்க கடல் பக்கம் தானே நிக்கறீங்க? யானைகளை கொஞ்சம் கூட்டிக்கிட்டுப் போய் குளிக்க வைக்கக் கூடாதா?

டர்ட்டி எலிஃபட்ஸ்!

( என்னது? யானைய பத்தி கமெண்ட்டு சொல்லக்கூடாதா?! சொல்லிட்டம்ல! சொல்லிட்டம்ல!! சொல்லிட்டம்ல!!! )

மணியன் said...

\\ //புகைப்படங்களெல்லாம் நல்லாவே எடுத்திருக்கீங்க. பாராட்டுக்கள்.//
நான் எடுக்கலீங்க அருள்.. கேமிரா கூட வந்த நண்பனோடது.. எடுத்ததும் அவன் தான்.. \\

அதுதானே பார்த்தேன்:))

அப்ப நண்பருக்குப் பாராட்டுக்கள். பொருத்தமான தலைப்புகளை தேர்ந்தெடுத்து இட்ட பொன்ஸ்சுக்கு தனி பாராட்டுக்கள் ! சரியா ?

கவிதா | Kavitha said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

//புகைப்படமெல்லாம் பாத்தப்போவே மைல்டா ஒரு டவுட் வந்துச்சி :)//
அருள் ஏன் இந்த பொய். மைல்டா தான் டவுட் வந்துச்சா. அவங்க கைப்பேசில் பிடித்து இருந்த படத்த பாத்தும் உங்களுக்கு மைல்டா தான் சந்தேகம் வந்துச்சா. போங்க அருள், நல்லா தமாசு பண்ணுறீங்க.
பொன்ஸ் எனக்கு மைல்டா எல்லாம் டவுட் கிடையாது ;)

//இதைத் தான்...
இதையேத் தான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தோம்... பின்னிட்டீங்க பொன்ஸ் :) //
தேவ் தெளிவா சொல்லும்மா, எத எதிர்பார்த்த, அடுத்தவன் பிடித்த படத்தை போடுவதையா????

//சிபி, நயன்தாராவ உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு கேள்வி பட்டேன்.. அப்படியா..?!! //
என்ன கேள்வி தான் பட்டீங்களா...
சிபி சிம்புவுடன் தி.நகரில் கட்டிப்பிடித்து, உருண்டு சண்டைப் போட்ட மேட்டரு எல்லாம் உங்களுக்கு தெரியாதா.......

//உங்க பொட்டியிலேருந்து எடுத்து போடுற மொதப் படம் யானையாத் தான் இருக்கும்னு நெனச்சேன். கரெக்டா அதே மாதிரி நடந்துடுச்சு.//
தல உன் சாயம் கண்ணாபிண்ணானு வெளுக்குது. அவங்க தான் அது நான் பிடிச்ச படம் இல்லனு சொல்லிட்டாங்களல அப்பறம் என்னா இது? பதிவை பாத்தவுடன் எதாச்சும் சொல்லனும் சொல்லுறது. இது கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன். சீக்கிரமே மாட்டிக்க போற பாரு....

பொன்ஸ்~~Poorna said...

பதிவை விட பெரிய பின்னூட்டம் போட்ட நாகை சிவா வாழ்க..

கவிதா | Kavitha said...
This comment has been removed by a blog administrator.
ALIF AHAMED said...

குட்டி நயண்தாரா நீந்துவதை பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.......

ஆமா இப்பவும் அப்படி தான் நீந்துவாங்களா ??

எங்கே என்று சொன்னா புண்ணியமா போகும் உங்களுக்கு ??

::)

(மின்னலு, எனக்கு சென்சார் வேலை கொடுப்பதே உனக்குப் பொழைப்பா போச்சு!! )

ALIF AHAMED said...

//
பதிவை விட பெரிய பின்னூட்டம் போட்ட நாகை சிவா வாழ்க
//

நாகை சிவாவை வன்மையாக கண்டிக்கிறேன் நான்கு பின்னுட்டத்தை ஒரே பின்னுட்டமாக இட்டதற்க்கு...


(பொன்ஸுவின் மனசட்சி : ஆஹா கண்டுபுடுச்சிட்டாயா.... கண்டுபுடுச்சிட்டாயா....:)

கவிதா | Kavitha said...
This comment has been removed by a blog administrator.
பொன்ஸ்~~Poorna said...

கவிதா, இது உங்கள் இடம்.. ரொம்ப ஓல்ட் நியூஸா வச்சிருக்கீங்க.. சங்கத்துச் சிங்கங்கள் உங்களை நல்லா அப்டேட் பண்ணுவாங்க..

கைப்புள்ள said...

//தல உன் சாயம் கண்ணாபிண்ணானு வெளுக்குது. அவங்க தான் அது நான் பிடிச்ச படம் இல்லனு சொல்லிட்டாங்களல அப்பறம் என்னா இது? பதிவை பாத்தவுடன் எதாச்சும் சொல்லனும் சொல்லுறது. இது கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன். சீக்கிரமே மாட்டிக்க போற பாரு....//

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பு...அவசரத்துல இன்னிக்கு கமெண்ட்ஸ் எதையும் படிக்கலே...அதனால வந்த வெனை.

ஆமா! நானும் பாக்குறேன்...நான் எங்கே போனாலும் பின்னாடியே வந்து நாட்டாமை வேலை பாக்குறதை ஹாபியா வெச்சிருக்கியா?

நாகை சிவா said...

//ஆமா! நானும் பாக்குறேன்...நான் எங்கே போனாலும் பின்னாடியே வந்து நாட்டாமை வேலை பாக்குறதை ஹாபியா வெச்சிருக்கியா? //
இது தப்பா? போற இடத்தில் ஏதுவும் தப்ப பண்ணினா யாருக்கு அசிங்கம், உனக்கும் நம்ம சங்கத்துக்கும் தானே. அதான் அடுத்தவங்க திருத்துவதற்கு முன்பாகவே நான் உனக்கு எடுத்து சொல்லுறேன். நல்ல உன் நல்லதுக்கு தாம்மா.
"மருந்து கசப்பா தான் இருக்கும், ஆனா வாழ்க்கை இனிப்பா இருக்கனுனா மருந்த சாப்பிட்டு தான் ஆகனும்."

நாமக்கல் சிபி said...

//சந்தோஷ் என்னவோ தங்கச்சின்னு சொல்லிட்டு போறாரு.//

கவிதா!

சந்தோஷ் சொல்றதை நம்பாதீங்க!
அவரு வலைப்பதிவர் அல்ல! வதந்தி பதிவர்.

Santhosh said...

//"மருந்து கசப்பா தான் இருக்கும், ஆனா வாழ்க்கை இனிப்பா இருக்கனுனா மருந்த சாப்பிட்டு தான் ஆகனும்."//
அய்யோ சிவா தாங்க முடியலை தத்துவத்தை கக்குற.

நாமக்கல் சிபி said...

//அது போல சிபிக்கு எப்போதும் நயந்தார மட்டும் தான் தெரிவார் போல..
//

மனதின் ஓசை! மிக்க நன்றி! அர்ஜூனனோடு ஒப்பிட்டதற்காக அல்ல!

என்னை சரியாகப் புரிந்து கொண்டுள்ளமைக்கு!

நாமக்கல் சிபி said...

//அய்யோ சிவா தாங்க முடியலை தத்துவத்தை கக்குற.//

மருந்து உள்ளே போனால்தான் தத்துவங்கள் கக்க முடியும் என்ற தத்துவம் தெரியாதா சந்தோஷ்!

ராசுக்குட்டி said...

யானை, ரயில், கடல் எல்லாம் எப்போ எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத-அற்புதமான விஷயங்கள். புகைப்படங்கள் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கு.

அப்புறம் நம்ம வலைப்பூ நல்ல படியா வந்துகிட்ருக்றதுக்கு உங்களுக்கும் நாமக்கல் சிபியாருக்கும் சொந்த நன்றிகள் (personal thanks-அ அப்டித்தானுங்களே சொல்வாங்க)

செல்வநாயகி said...

உங்கள் வலைப்பக்கத்தின் புதிய வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. யானைகளும் தான்:))

Santhosh said...

//மருந்து உள்ளே போனால்தான் தத்துவங்கள் கக்க முடியும் என்ற தத்துவம் தெரியாதா சந்தோஷ்!//

அப்படியா அதனால தான் எனக்கு தத்துவமே வரலையா?

ALIF AHAMED said...

//
(மின்னலு, எனக்கு சென்சார் வேலை கொடுப்பதே உனக்குப் பொழைப்பா போச்சு!! )
//

ம்

பொன்ஸ்~~Poorna said...

//சம்மருக்கு இதமான புகைப்படங்கள்// நக்கீரன், இன்னொரு சம்மர் ஸ்பெசல் தயாராகிக் கொண்டிருக்கிறது..

மனு, //பேரு வைங்கப்ப்பா கணேசனுக்கு. // அவர் பேரும் பொன்ஸ் தான் ;)

//பிடிச்சிருக்கு//- என்னக்கா, மூணு யானைக்கு ஒரே ஒரு பிடிச்சிருக்கா ?:)

ராசுக்குட்டி, //நாமக்கல் சிபியாருக்கும் சொந்த நன்றிகள் // உங்களுக்கு உதவுறது சிபி மட்டும் தாங்க.. அவருக்கே உங்க நன்றி உரித்தாகுக.. என் நன்றியும் :)

பொன்ஸ்~~Poorna said...

சிபி, கைப்பு, சந்தோஷ், மனதின் ஓசை, கவிதா, மின்னலு, உங்க நாட்டமையையும் நயன்தாராவையும் இந்தப் பதிவுல இத்தோட விட்ருங்கப்பா.. சங்கத்திண்ணைல போய்ப் பேசினா, பின்னூட்ட எண்ணிக்கை கூடும்.. சங்கத்துக்குப் பேரும் சேரும் ;)

என் பொட்டிலேர்ந்து போடறேன் தேவ். சொல்லிக்கிற மாதிரி இன்னும் ஒண்ணும் எடுக்கலை.. இனிமே கொஞ்ச நாள் கழிச்சி போடுறேன்..

நன்மனம், மணியன், நன்றி :)

செல்வநாயகி, முதல் வருகைக்கு நன்றி.

//என்னது? யானைய பத்தி கமெண்ட்டு சொல்லக்கூடாதா//
ம்ஹு ம்ஹும்... வாத்தியார்.. யானை அழுவுது.. டர்ட்டின்னு சொல்லிட்டீங்களே!!! உங்க வீட்டு குட்டி தேவதைக்கு யானை பிடிக்காதா?!! :(

Santhosh said...

//சிபி, கைப்பு, சந்தோஷ், மனதின் ஓசை, கவிதா, மின்னலு, உங்க நாட்டமையையும் நயன்தாராவையும் இந்தப் பதிவுல இத்தோட விட்ருங்கப்பா.. சங்கத்திண்ணைல போய்ப் பேசினா, பின்னூட்ட எண்ணிக்கை கூடும்.. சங்கத்துக்குப் பேரும் சேரும் ;)//

ஸாரி பொன்ஸ்

நாமக்கல் சிபி said...

//சிபி, கைப்பு, சந்தோஷ், மனதின் ஓசை, கவிதா, மின்னலு,//

சொல்லொரு சொல்!

:)

பொன்ஸ்~~Poorna said...

//சிபி, கைப்பு, சந்தோஷ், மனதின் ஓசை, கவிதா, மின்னலு, உங்க நாட்டமையையும் நயன்தாராவையும் இந்தப் பதிவுல இத்தோட விட்ருங்கப்பா.. சங்கத்திண்ணைல போய்ப் பேசினா, பின்னூட்ட எண்ணிக்கை கூடும்.. சங்கத்துக்குப் பேரும் சேரும் ;)
//
சிபி, கைப்பு, சந்தோஷ், மனதின் ஓசை, கவிதா, மின்னலு எல்லாருக்கும் சாரி..

சாரி சொல்லி தப்பிக்கிறது நல்லா இல்லைன்னு எனக்கு தெரியும்.. என்னவோ ரொம்ப கடுப்பான மூட்ல இருந்தேன்.. அதான் அப்படி எழுதிட்டேன்..

ரொம்ப சாரி.. இனி இதுமாதிரி நடக்காதுன்னு சொன்னா, அதுனால ஏதாவது நியாயம் இருக்கான்னு தெரியலை.. கவிதா அவங்க பின்னூட்டத்தை எடுத்ததிலிருந்து என்னவோ பெரிய தப்புன்னு மட்டும் புரியுது.. சாரி..

முதல்ல இந்தப் பதிவையே எடுத்துடலாம்னு இருந்தேன்.. ஒரு நாள் எடுக்கவும் எடுத்துட்டேன்.. இப்போ அதுவும் தப்புன்னு தோணிச்சு..அதான்.. திருப்பி போட்டுட்டேன்.. என்னோட சாரியும் பொதுவில் இருக்கட்டும்னு அதையும் பதிவு பண்றேன்..

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது.. அப்பப்போ சொல்லிக்கணும்.. :((( அதுக்குப் பதிலா இந்தப் பதிவுக்கு வந்து பார்த்துக்கிறேன்..

நாகை சிவா said...

////குட்டி நயன்தாரா படம் நல்லா இருக்குங்க பொன்ஸ்! //
சிபி ஆனாலும் உங்களுக்கு தங்கச்சி பாசம் ரொம்ப அதிகம்... //
////சந்தோஷ் என்னவோ தங்கச்சின்னு சொல்லிட்டு போறாரு.//
கவிதா, நயன் தாரா தன் தங்கச்சி என்று சந்தோஷ் சொல்லுறார். பங்கு அப்படி தானே. வந்து ஒத்துக்கோ.

நாகை சிவா said...

//கவிதா, இது உங்கள் இடம்.. ரொம்ப ஓல்ட் நியூஸா வச்சிருக்கீங்க.. சங்கத்துச் சிங்கங்கள் உங்களை நல்லா அப்டேட் பண்ணுவாங்க.. //
//நயன்தாராவையும் இந்தப் பதிவுல இத்தோட விட்ருங்கப்பா.. //
பொன்ஸ் என்னங்க என்ன நினைத்துகிட்டு இருக்கீங்க. கவிதாவுக்கு நயன் தாரா மேட்டர் அப்டேட் பண்ண சொன்னீங்கள முதல. அத பண்ணிட்டு தான் உங்க பதிவை விடுவதாக இருக்கோம். அதுவும் கவிதா சொல்லனும் எனக்கு எல்லா மேட்டரும் புரிந்து விட்டது என்று. அதுவரை கமெண்ட ப்பளிச் பண்ணும் வேலையை ஒழுங்கா பார்க்கவும்.

நாகை சிவா said...

// ராசுக்குட்டி said...
நம்ம வலைப்பூ நல்ல படியா வந்துகிட்ருக்றதுக்கு உங்களுக்கும் நாமக்கல் சிபியாருக்கும் சொந்த நன்றிகள் (personal thanks-அ அப்டித்தானுங்களே சொல்வாங்க) //
யாரும்மா அது, புதுசா இருக்கு. நல்வரவாக ஆகட்டும். கூட செம்புலியும் வந்து இருக்காரு.

//சொந்த நன்றிகள் (personal thanks)
ஏம்ப்பா சங்கம் வைத்து தமிழை வளர்த்துக்கிட்டு இருக்கோம். இங்கன வந்து தப்பா சொல்லுறியே.
தனிப்பட்ட நன்றிகள் என்பது சரியான வார்த்தை என்று நினைக்கின்றேன். சங்க பிரமுகர்கள் சரியான வார்த்தையை கூறுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நாகை சிவா said...

////மருந்து உள்ளே போனால்தான் தத்துவங்கள் கக்க முடியும் என்ற தத்துவம் தெரியாதா சந்தோஷ்!//

அப்படியா அதனால தான் எனக்கு தத்துவமே வரலையா? //
அட பாவி, உனக்கு பொய் சொல்வதற்கு ஒரு அளவே இல்லாம போச்சு. நமது கவிதையின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் கொடுத்த விருந்தில் நீ தான் இந்த தத்துவத்தை உதிர்த்தாய். இப்ப என்னடானா இப்படி ஜகா வாங்குறியே!

நாகை சிவா said...

//சிபி, கைப்பு, சந்தோஷ், மனதின் ஓசை, கவிதா, மின்னலு எல்லாருக்கும் சாரி.. //
இதுல என் பெயர் இல்ல. தனியாக சாரி கேட்கவும்.

//சாரி சொல்லி தப்பிக்கிறது நல்லா இல்லைன்னு எனக்கு தெரியும்.. //
ஆமாம் நல்லா இல்ல. ஆங்கில வார்த்தை உபயோகப்படுத்தியது நல்லா இல்ல. தமிழில் கேட்கவும்.

//என்னவோ பெரிய தப்புன்னு மட்டும் புரியுது.. சாரி.. //
//அதுவும் தப்புன்னு தோணிச்சு..அதான்.. //
உங்களுக்கு எங்க எல்லாமே தப்பாவே படுது.

//ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது.. அப்பப்போ சொல்லிக்கணும்.. :((( அதுக்குப் பதிலா இந்தப் பதிவுக்கு வந்து பார்த்துக்கிறேன்..//
தெரிஞ்சா சரி
புரிஞ்சா சரி
அப்ப அப்ப வந்து
பாத்துக்கிட்டா சரி

நாகை சிவா said...

//என்னவோ ரொம்ப கடுப்பான மூட்ல இருந்தேன்.. அதான் அப்படி எழுதிட்டேன்..//
இது நல்லா இல்லங்க. அப்படி நீங்க கடுப்பான மூடில் இருந்தால் அந்த பின்னூட்டங்கள் எல்லாத்தையும் ப்பளிச் பண்ணாமல் இருந்து இருக்க வேண்டும். அல்லது பதிலாவது சொல்லாமல் இருந்து இருக்க வேண்டும். உங்கள் பதிவில் எங்கள் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது என்ற எண்ணத்தில் தான் இதை செய்தோம். இதே போல தானே நம் ஒவ்வொருவர் பதிவிலும் செய்துக் கொண்டு இருக்கின்றோம். இதற்கு நடுவில் உங்கள் விருப்பு வெறுப்புகளை காட்டலாமா. அப்படி காட்டியது தப்பு தான்.

நீங்கள் பொதுவில் எடுத்துக் கூறியதால் இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைக் காட்ட தான் மேலே நான் இட்ட சில பின்னூட்டங்கள். மற்றவர்களும் நம்ம பொன்ஸ் தானே என்று இதை சதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்(கவிதா உட்பட).
பார்க்கலாம்

இரா.ஜெகன் மோகன் said...

//யாரும்மா அது, புதுசா இருக்கு. நல்வரவாக ஆகட்டும். கூட செம்புலியும் வந்து இருக்காரு.
//

yaruppa adhu namma perai sollurathu!

(Rasukkuttiyoda vanthathu sembuli jagan thana)

இரா.ஜெகன் மோகன் said...

//இதே போல தானே நம் ஒவ்வொருவர் பதிவிலும் செய்துக் கொண்டு இருக்கின்றோம்//

oru groupathan kilambi irukkuranga pola!