Friday, August 18, 2006

வாழும் புன்னகை

"அம்மா!, அம்மாஆஆ!!!!"

"என்னடி, வர்றதே லேட்டு, வரும்போதே சத்தம் போட்டுகிட்டு வரே?"

"காய்கறி வாங்கினியா?"

"நேத்து தானே போய் வாங்கி வந்தோம்.. உனக்குக் கூடத் தெரியுமே!!"

"ஆமாம்.. எங்கே இருக்கும்?"

"இதுக்குத் தான் சமையல் ரூம் பக்கம் கொஞ்சமாவது வரணும்ங்கிறது.. காய்கறி ப்ரிட்ஜில தான் இருக்கும்னு கூட தெரியாத ஒரு பொண்ணு.. உன்னைக் கட்டிகிட்டு.. "

"போதும் போதும்.. ப்ரிட்ஜ்ல இருக்கு அவ்வளவு தானே?"

"என்னாச்சு உனக்கு? இப்போ மணி பத்து.. இப்போ போய் சமைக்கப் போறியா? நாளைக்கு ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்து சமைக்கலாம் சரியா?"

"அட..இப்போவே வேணும்மா..."

"என்னம்மா சொல்றே? அமெரிக்கா போய் என் பொண்ணுக்கு சமையல்ல இத்தனை ஆர்வம் வந்துடுச்சா? அடுத்த பொண்ணையும் அனுப்ப வேண்டியது தான்.. கொஞ்சமாவது நான் நிம்மதியா இருக்கலாம்..."

"இல்லைம்மா.. சமைக்க கேட்கலை.. "

"பின்ன?"

"இரு.. சொல்றேன்.. சரி, தக்காளி இருக்கு.. பீன்ஸ் வாங்கலையா?"

"பீன்ஸா? அது எதுக்கு? உனக்குத் தான் பீன்ஸ் பிடிக்காதே!!"

"ம்ச்.. கேள்வி கேட்காதே.. சும்மா.. பீன்ஸ் இல்லையா?.. சரி.. கொத்தவரங்காயாவது இருக்கே.."

"என்ன பண்ணப் போறே?"

"கொஞ்ச நேரம் வேடிக்கை பாரு.. முதல்ல அந்த சேர்லேர்ந்து எழுந்திரு.."

"படுத்தல்டீ நீ.. நிம்மதியா சீரியல் பார்க்க விடுறியா!!!"




"அட.. அழகா இருக்கே.. "

"இரு.. இரு.. காமிரா எடுத்துவரேன்.. கலைச்சிடாதே!!"

"ம்ம்.. இப்போ சொல்லு.. இது என்னது?"

"புன்னகை முகம்.."

"கரெக்ட்... "

"இதுக்குத் தான் பீன்ஸ் தேடினியா?"

"ஆமாம்.. "

"அப்போ பீன்ஸ் தான் புன்னகையா?"

"இல்லைம்மா.. இப்போ கொத்தவரங்காய் தான்.. அதான் பீன்ஸ் கிடைக்கலியே!!"

(தங்கை: உன்னை எல்லாம் பீன்ஸ்னு சொல்றாங்களா? பூசணிக்காய்ன்னு இல்லை சொல்லணும்?)

55 comments:

Anonymous said...

சொன்னது:

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா.. இது என்ன வெளயாட்டு...

ப்ரியன் said...

பொன்ஸ் நீங்களுமா?

கவிதா | Kavitha said...

பொன்ஸ், நீங்களும் ஒரு முடிவோட தான் இருக்கீங்களா..

பீன்ஸ் - புரியுது, பூசணிக்காய் கூட புரியுது, அது என்ன கொத்தவரங்காய்.. புரியலையே பொன்ஸ்.. சொல்லுங்களேன்.. ப்ளீஸ்..

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

சிலர் போட்டோ சரியா வரலைன்னாங்க.. அவசரத்துல லோட் பண்ணினது. இப்போ சரியாயிருச்சு பாருங்க..

Anonymous said...

ராம் சொன்னது:

பொன்ஸ்,

என்னாச்சு உங்களுக்கு, நீங்களும் இந்தமாதிரி பப்ளிசிட்டி தேடணுமினு என்னா வந்து கெடக்கு.... உங்க ஸ்டைல் சொல்லணுமின்னா... என்னவோ போங்க....

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

//ஆஹா.. இது என்ன வெளயாட்டு... //
அதே விளையாட்டு தான் பாலா!! :))

Anonymous said...

நன்மனம் சொன்னது:

பொன்ஸ், க.க.க.போ; ரொம்ப ஸ்போர்டிவ்

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

//என்னாச்சு உங்களுக்கு, நீங்களும் இந்தமாதிரி பப்ளிசிட்டி தேடணுமினு என்னா வந்து கெடக்கு.... உங்க ஸ்டைல் சொல்லணுமின்னா... என்னவோ போங்க....//
தலைவா ராம்.. பப்ளிசிட்டி தேடத் தான் லிவிங் ஸ்மைல் பெயரைப் பயன் படுத்தறாங்கன்னு, இந்தப் பதிவுலயாவது உங்களுக்குச் சொல்லணும்னு தோணிச்சே.. ரொம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம்..

Anonymous said...

மொத மொதல்லே லிவிங் ஸ்மைல் பேர வெச்சி பப்ளிசிட்டி தேடுனதே ராம் தான். இங்கே வந்து யோக்கியம் பேசுறாரா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அமெரிக்காவில இருந்து எப்ப வந்தீங்க..?

நானும் திடுக்கிட்டு விட்டேன்;..எங்கே சமைக்கப் போறீங்களோன்னு..? :)

Anonymous said...

சதயம் சொன்னது:

எல்லாருக்கும் வெளம்பரம் தேவைப்படுது....ஹி..ஹி...வேறென்ன சொல்றது...

அருள் குமார் said...

//நானும் திடுக்கிட்டு விட்டேன்;..எங்கே சமைக்கப் போறீங்களோன்னு..? :)
//
எனக்கு நம்பிக்கை இருந்திச்சு. கடைசில வேற எதுக்கோதான் காய்கறியெல்லாம் கேப்பாங்கன்னு :)

Anonymous said...

அடப்பாவீங்களா...
ஆம்பளைங்க.. பதிவுக்கு மட்டும் நூறு பின்னூட்டமிடும்..அனானிகள் பொண்ணுங்க பக்கம் அனானியா வர மாட்டாங்களே..

- யெஸ்.பாலபாரதி said...

தலைப்பை தமிழில் தந்து இருக்கலாமே...
அவர்களைப் போல...

- யெஸ்.பாலபாரதி said...

என்னைப் போலவும்-ன்னு ஒரு வரி விட்டுப் போச்சு..

Anonymous said...

இதுவும் டெஸ்ட்... தான்...

Anonymous said...

யார் அந்த போலி...

Anonymous said...

// Anonymous said...

சொன்னது: //
டேய்.. லூசு... எதனாச்சும் சொல்லனும்.. சும்ம இருந்த என்ன அர்த்தம்..

இராம்/Raam said...

//மொத மொதல்லே லிவிங் ஸ்மைல் பேர வெச்சி பப்ளிசிட்டி தேடுனதே ராம் தான். இங்கே வந்து யோக்கியம் பேசுறாரா? //

யோக்கியம்'கிறா வார்த்தைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்... நீங்க என்னொட லி.ஸ்.வி. பதிவில பொன்ஸ் இட்ட பின்னூட்டத்திற்கு என்னோட பதிலை பார்த்திருந்தா இதை கேட்கமாட்டிங்க....

இந்த வார்த்தைகளின் போக்கை வைத்தே இதுயாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்....

நல்லா இரு சாமி நீயீ....!

Anonymous said...

பீன்ஸ் முகமூடியை கிழித்தெறிந்து ஒரு பதிவு போடுமாறு தலைவர் செந்தழலாரை கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

//மொத மொதல்லே லிவிங் ஸ்மைல் பேர வெச்சி பப்ளிசிட்டி தேடுனதே ராம் தான். இங்கே வந்து யோக்கியம் பேசுறாரா? //
- ராம், இது என் கருத்தில்லை.. இதில் எனக்கு ஒப்புதலும் இல்லை

என்ன சொல்லப் போறீங்கன்னு பார்த்தேன்.. நல்லா சொல்லிட்டீங்க.. யாருங்க அது.. எனக்கு மட்டும் சொல்லுங்க :))

Anonymous said...

ஆன்சைட் அனானி சொன்னது:

//அடப்பாவீங்களா...
ஆம்பளைங்க.. பதிவுக்கு மட்டும் நூறு பின்னூட்டமிடும்..அனானிகள் பொண்ணுங்க பக்கம் அனானியா வர மாட்டாங்களே..//

எவேஞ் சொன்னான் ? அனானிக வரமாட்டாங்கென்னு.

யக்கோவ், எப்ப ஊருக்கு போனீங்கோ?

Anonymous said...

இதனால் ஸகலமானவர்களுக்கும் ஸொல்வது என்னவென்றால்....

பீன்ஸ், ரவி, லக்கிலுக், பால பாரதி & கோவாலு பதிவில் வாழும் புன்னகை குறித்து ஸிலம்பாட்டம் ஆடும் அனானிகளுக்கு எஸ்ஸரிக்கை.....

அங்கு பல கண்ணி வெடிகள் பொருத்தப்பட்டுள்ளன....

அதன் மூலம் உங்கள் பெயர், ஊர், முகவரி, அலுவலக முகவரி, உங்க மேனேஸர் பெயர், அவரின் முகவரி ஆகியவை திரட்டப்படும்.....

மேலும் நீங்கள் தமிழ்மணத்தில் செலவிடும் நேரமும் கணக்கிட்டு உங்கள் மேனேஸருக்கு மெயில் அனுப்பப்படும்....

ஆகவே உஸார்.... உஸார்....

- கொம்பு ஸீவி

Anonymous said...

ஆயாவை கொன்ற ஆட்டையாம்பட்டியான் சொன்னது:

பீன்ஸ், ரவி, லக்கிலுக், பால பாரதி & கோவாலு பதிவில் வாழும் புன்னகை குறித்து ஸிலம்பாட்டம் ஆடும் அனானிகளுக்கு எஸ்ஸரிக்கை.....

அங்கு பல கண்ணி வெடிகள் பொருத்தப்பட்டுள்ளன....

அருமை அருமை...ஆனால் கண்ணி வெடிக்கு பதில் கணினி வெடி என்று இருக்கனும்...

அதன் மூலம் உங்கள் பெயர், ஊர், முகவரி, அலுவலக முகவரி, உங்க மேனேஸர் பெயர், அவரின் முகவரி ஆகியவை திரட்டப்படும்.....

மேலும் நீங்கள் தமிழ்மணத்தில் செலவிடும் நேரமும் கணக்கிட்டு உங்கள் மேனேஸருக்கு மெயில் அனுப்பப்படும்....

ஆகவே உஸார்.... உஸார்....

இராம்/Raam said...

//என்ன சொல்லப் போறீங்கன்னு பார்த்தேன்.. நல்லா சொல்லிட்டீங்க..//

டாங்கீஸ் பொன்ஸ்....

// யாருங்க அது.. எனக்கு மட்டும் சொல்லுங்க :)) //

அச்சுக்கு பிச்சுக்கு நான் அதை சொல்லமாட்டேன் உங்கிட்டே... :-)

Anonymous said...

அனானிதேன்.. சொன்னது:

-- ஆத்தாவைப் போட்டுத்தள்ளிய ஆட்டையாம்பட்டியான் -- சரியா வந்திருக்குமோ?

G Gowtham said...

என்னமோ நடக்குது!
மர்மமா இருக்குது!!
ஒண்ணுமே புரியல உலகத்துல!!!

பொன்ஸ்~~Poorna said...

பதிவு என்னவோ இந்தப் பதிவுக்காகன்னு நினைத்து, "பொன்ஸ் நீங்களுமா?" என்று தனிமடல் விடும் நண்பர்களே..


சாரி.. இது அதுக்காக இல்லை.. இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் உருவான கலைநயம் மிக்க ஐடியா இது..

பின்னூட்டம் இன்னும் கிளப்பி விட்ட கலையார்வத்தையும்(?!), அதுக்காக நான் எடுத்த சில படங்களையும் நாளைக்குப் போடறேன்.. இப்போ சரியா வலையேற மாட்டேங்குது..

வினையூக்கி said...

"வாழும் புன்னகை" எனும் தலைப்பு நல்லா இருக்கு

G.Ragavan said...

அடடே! இந்தப் படத்த பி.சி.ஸ்ரீராம்தானே எடுத்தாரு? உண்மையச் சொல்லீருங்க...

Anonymous said...

Manga Madayan சொன்னது:

//ஆத்தாவைப் போட்டுத்தள்ளிய ஆட்டையாம்பட்டியான் -- சரியா வந்திருக்கு//மோ?//


:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Anonymous said...

எந்த ஊர்ல தக்காளி கருப்பு கலர்ல இருக்கு ?

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

தக்காளி ரசிகன்,
அங்க தாங்க நீங்க என்னோட புகைப்படம் பிடிக்கும் திறமையைப் பார்க்கணும்.. தக்காளியின் இயற்கை நிறத்தை இன்னும் அதிகமா இயற்கையா காட்டுறது ஒருவகை.. இது, தக்காளியின் இயற்கை நிறத்தைக் கொஞ்சம் அழித்து.. அதனால், அந்த வெளிச்சத்தை மட்டும் பளிச்சிட வைத்து.. ஒரு ஒளி தெரியும் கண் மாதிரி ஆக்கி..

(பீன்ஸ்- அதாங்க பொன்ஸ் மனசாட்சி -: அம்மணி.. போதும் பில்டப்பு.. படப் பொட்டின்னு சொல்லி ப்ளாஷ் வேலை செய்யாத ஒரு இயந்திரத்தை வச்சிகிட்டு அதுக்கு இத்தனை ஒப்பேத்தலா!!! )

தக்காளி ரசிகன், உங்க லிங்க்ல இருக்கும் தக்காளிகள் சூப்பர்..

உங்கள் நண்பன்(சரா) said...

இனி கொஞ்ச நாளைக்கு பீன்ஸ், கொத்தவரங்காய்,பூசணிக்காய் பார்த்தால் பொன்ஸ் அக்கா நியாபகம் தான் வரும்,
(மதிய சாப்பாட்டில் பீன்ஸ் பார்த்ததும் சிரித்துவிட்டேன்).



அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

லிவிங் ஸ்மைல் பேர் பொட்ட பதிவில் 37 பின்னூட்டம் தானா? இதில் ஏதோ அனானிகளில் சதிவேலை இருக்கிறது!

Anonymous said...

//எந்த ஊர்ல தக்காளி கருப்பு கலர்ல இருக்கு ?//
மனத்தக்காளி கருப்பு கலர்லதான்யா இருக்கும். இது ராட்சச மனத்தக்காளியா இருக்கும்.

இராம்/Raam said...

//அடடே! இந்தப் படத்த பி.சி.ஸ்ரீராம்தானே எடுத்தாரு? உண்மையச் சொல்லீருங்க... //

ராகவா,

உங்களின் இந்த மேம்போக்கான, நவீன இலக்கியகுழப்பங்களில் சேர்க்க இயலாத, மிகவும பிற்போக்கான முற்போக்கு நவீனத்துவ உள்குத்தை இதை இப்போதைக்கு மிக உள்ளர்த்ததுடன் ஆதாரிக்கிறேன்.....

ஹீக்கும்.

Anonymous said...

வாழ்க உங்களது தமிழ் தொண்டு

Anonymous said...

யெஸ்.பாலபாரதி அவர்கள் தனது பின்னூட்டங்களை நிறுத்தி விட்டதால் இங்கு ஆரம்பம்.

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

பிளாஸ் நியூஸ்,
தல, யாராச்சும் புதுப் பதிவு போடுவாங்க.. அங்க போய் உங்க வேலையைக் காமிங்க.. பொன்ஸ் பதிவுல இது போதும்..

உங்க லிங்கும் சூப்பருங்க.. ஹையோ.. எத்தனை நாய்க்குட்டி.. அழகழகா.. க்யூட்!! :))

Anonymous said...

மின்னுது மின்னல் சொன்னது:

ஜல்லி பதிவு என்னத்த சொல்ல........

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

மின்னல், என்னம்மா.. ராத்திரி பத்து மணிக்கு அம்மாவைப் பயமுறுத்திப் பதிவு போட்டிருக்கேன்.. அதைப் போய் ஜல்லின்னு சொல்லிட்ட!! என்னோட படம் பிடிக்கும் கலையார்வத்தைப் பத்தி நோ கமென்ட்ஸ்?!!!

ALIF AHAMED said...

/./

ராத்திரி பத்து மணிக்கு அம்மாவைப் பயமுறுத்திப் பதிவு போட்டிருக்கேன்
/./

நீங்க சமைக்க போறீங்கனு சொன்னதும் அம்மா பயந்து இருப்பாங்க...::)))

ALIF AHAMED said...

தமிழ் எழுத்துருவுக்கு மாற்ற மேல் உள்ள பெட்டியில் தட்டவும்.
ஆங்கிலத்தில் கருத்து பதிய நேரடியாகக் கீழ்ப் பெட்டியில் தட்டவும்.

சுரதா, கிருபாவுக்கு நன்றி
//.//

இத சரி பன்ன கூடாதா????
இதில் தவறு நடக்க சாத்தியம் உண்டா???இல்லையா??



போலிகள் வர.!!!
கதவு திறந்து இருக்கு என நினைக்கிறேன் இல்லையெனில்
விளக்கவும்.பிளீஸ்ஸ்ஸ்ஸ்

நாகை சிவா said...

பொன்ஸ்!
உள்குத்து, வெளிகுத்து, சைட் குத்து, நேர் குத்து எல்லா குத்தையும் குத்தி ஒரு பதிவு போட்டு இருக்கீங்க.
இந்த ஒரு பதிவு மூலம் நான்கு மாங்காய் அடித்ததாக எனக்கு தெரியுது. அவ்வளவு தான் இல்ல வேற ஏதும் மாங்காயும் கிடைத்ததா?

இராம்/Raam said...

//மின்னல், என்னம்மா.. ராத்திரி பத்து மணிக்கு அம்மாவைப் பயமுறுத்திப் பதிவு போட்டிருக்கேன்.. அதைப் போய் ஜல்லின்னு சொல்லிட்ட!! //

அப்பவே அம்மா நாலு சாத்து போட்டு சோறு போட்டு தூங்கவச்சிருந்தா நிம்மதியா இருத்திருக்கும்...

//என்னோட படம் பிடிக்கும் கலையார்வத்தைப் பத்தி நோ கமென்ட்ஸ்?!!!//

பி.ஸி.ராம் தேடிகிட்டு இருக்கார்.. எப்படி இம்புட்டு அழகா படம்பிடிச்சீங்கன்னு கேட்க....

நாகை சிவா said...

//அங்க தாங்க நீங்க என்னோட புகைப்படம் பிடிக்கும் திறமையைப் பார்க்கணும்.. தக்காளியின் இயற்கை நிறத்தை இன்னும் அதிகமா இயற்கையா காட்டுறது ஒருவகை.. இது, தக்காளியின் இயற்கை நிறத்தைக் கொஞ்சம் அழித்து.. அதனால், அந்த வெளிச்சத்தை மட்டும் பளிச்சிட வைத்து.. ஒரு ஒளி தெரியும் கண் மாதிரி ஆக்கி.. //
யோவ் அந்த அக்கிரமத்த கேட்க ஆளே இல்லயா.....

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

இதுவும் அனானி ஆப்ஷன் தான் மின்னல்.. ஏதோ பதிவர்கள் மேலுள்ள நம்பிக்கையில் வைத்திருக்கேன்.. பார்ப்போம்.. நம்பிக்கை பொய்யாகும் போது எடுத்துடுவோம்..

இப்போதைக்கு என்னாலானது மட்டுறுத்தல் செய்யறேன்.. - படிச்சு பார்த்து, சந்தேகம் வரும்போது கேட்டு சோதித்து..

நாகை சிவா said...

//என்னமோ நடக்குது!
மர்மமா இருக்குது!!
ஒண்ணுமே புரியல உலகத்துல!!! //
என்ன கெளதம், நல்லா தெளிவா சொல்லி இருக்காங்க. பின்னூட்டத்தில் வேற எல்லாரும் விளக்கி சொல்லி இருக்காங்க. இன்னும் புரியலனு சொல்லுறது நல்லாவா இருக்கு. இதுக்கு மேல எப்படி விளக்கி பதிவு போடுறது. என்னமோ போங்க

ALIF AHAMED said...

.
சேரில் புன்னகையா
.
தல மாதிரி கேமராவும் கையுமா...
.
ம்
ம்

இராம்/Raam said...

//பி.ஸி.ராம் தேடிகிட்டு இருக்கார்.. //

சாரிப்பா பெல்லிங் "மிஸ்"டேக்...

பி.ஸி.ஸ்ரீராம் தேடிகிட்டு இருக்கார்.. திருத்தி வாசிங்க....

அருள் குமார் said...

//யோவ் அந்த அக்கிரமத்த கேட்க ஆளே இல்லயா.....// அப்படி இல்ல சிவா... இதெல்லாம் கேட்டு ஒன்னும் ஆகப்போறதில்லன்னு விட்டுடறதுதான் :(

இராம்/Raam said...

//பொன்ஸ்!
உள்குத்து, வெளிகுத்து, சைட் குத்து, நேர் குத்து எல்லா குத்தையும் குத்தி ஒரு பதிவு போட்டு இருக்கீங்க.//

வா புலி,

இவ்வளவு இருக்கா இதில, ஏதோ நீ சொல்லித்தான் எங்களுக்கு தெரியுது... :-) ஹீக்கும்....

//இந்த ஒரு பதிவு மூலம் நான்கு மாங்காய் அடித்ததாக எனக்கு தெரியுது. அவ்வளவு தான் இல்ல வேற ஏதும் மாங்காயும் கிடைத்ததா? //

இனிமேதான் எதாச்சும் மாங்கா ம.. கிடைக்கும்

நாகை சிவா said...
This comment has been removed by a blog administrator.