Wednesday, June 14, 2006

என்றென்றும் இனியவை ஆறு

நான் வலைப்பதிவுக்கு வந்த புதிதில் இந்த நாலு விளையாட்டு கன ஜோராக நடந்து கொண்டிருந்தது. நாலு விளையாட்டில் எனக்கு அப்போது பிடித்த விஷயமே அதில் இடம்பெறும் அடுத்த நால்வரைக் கூப்பிடுவது தான். அதன் மூலம், அடுத்த நால்வரின் பக்கங்களின் லிங்க் கிடைக்கும். அங்கிருந்து மேலும் நான்கு பக்கங்கள். இப்படித் தான் ஒவ்வொரு பக்கமாகத் தேடிப் படித்தேன். அப்புறம் தான் தமிழ்மணம் என்று ஒன்று இருப்பதே தெரிந்தது. வெகு நாட்களுக்கு அப்புறம் தான் தேன்கூடு பற்றித் தெரிந்தது.

நம்மையும் ஒருவர் நாலு விளையாட்டுக்குக் கூப்பிட மாட்டாரா என்று நினைத்ததுண்டு. ஆனா நாஆஆலு விஷயம் எழுதணுமே, நானெல்லாம் நாலும் தெரிஞ்ச ஆள்தானா என்று சந்தேகம் எப்போவுமே உண்டு.

இதோ, யாழிசைச்செல்வன் மீண்டும் ஆறு பதிவு என்று அதை மீள்விளையாட்டாக்கி இருக்கிறார். என்னையும் கூப்பிட்டு விட்டார். ஆறு பதிவு போட ஆறு நாள் உட்கார்ந்து யோசித்தேன். ஒன்றும் வேலைக்காகும் போல் தெரியவில்லை. ஆறு விஷயங்களில், ஆறு பொருளெடுத்து வகைப் படுத்த எனக்கு எந்த ஆறும்(வழி) பிடிபடவில்லை. அதான், விளையாட்டை எனக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாற்றி விட்டேன்..

1. என்றென்றும் இனியவை - பாடல் ஒன்று:
"ஜாக் அன்ட் ஜில்" தொடங்கி இன்றைய "மஞ்சள் வெயில் மாலையிலே" வரை சொற்கள் தெளிவாய் இருக்கும் எல்லாப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும். அதிலும் என்றைக்குக் கேட்டாலும் பிடிக்கும் ஒரு மாதிரி அமைதி தரும் பாட்டு "குறையொன்றும் இல்லை". இதை எம்.எஸ் குரலில் பிடிக்கும் என்று நிறைய பேர் சொல்வார்கள்.. எனக்கு நான் பாடினால் தான் பிடிக்கும்.. மத்தவங்க பாடு தான் திண்டாட்டம் :)

2. என்றென்றும் இனியவை - பிடித்த பொழுதுபோக்கு இரண்டு :
அ. மதியம் பதினோரு மணி வெயிலில், படுத்துக் கொண்டே, படித்துக் கொண்டே தூங்குவது. (வெயில் is a must)
ஆ. பஸ்ஸோ காரோ, ப்ளேனோ, ரயிலோ.. தொலை தூரப் பயணங்களில் ஜன்னலோரம் அமர்ந்து புத்தகத்தில் ஒரு கண், எதிர் இருக்கைக்காரர்கள் செய்யும்/பேசும் விஷயங்களில் ஒரு கண், ஜன்னல் வழியே தெரியும் உலகில் ஒரு கண், அட அப்பப்போ வரும் தின்பண்டங்களை மறந்துவிட்டேனே :)..

3. என்றென்றும் இனியவை - ரசித்து தங்கிய ஊர்கள் மூன்று
அ. அப்பாவின் சிற்றூர் - மன்னார்குடி அருகில் வாட்டார் நல்லூர். நல்ல ஊரு. விடுமுறைகளுக்கு மட்டுமே சென்றதால், என்னுடைய ஊர் என்று சொந்தம் கொண்டாட மனம் வரவில்லை :)
ஆ. ஹைதராபாத் - கிட்டத் தட்ட நாலு வருஷம் இருந்தேன். பல விஷயங்களில் என் கண்ணைத் திறந்த நண்பர்களைச் சந்தித்த ஊர். நான் பார்த்த முதல் வெளி உலகம்.
இ. பூனா - ஆறு மாதமே இருந்தாலும் இந்த ஊரில் இருந்த நாட்களை நான் ரொம்பவே ரசித்தேன். நல்ல நண்பர்கள் இங்கும்.

4. என்றென்றும் இனியவை - பிடித்த பானம் நாலு
உணவுன்னா எல்லாமும் வரும். அதான் பானம்.
அ. நானே போட்ட டீ
ஆ. அம்மா போட்டுக் கொடுக்கும் காபி
இ. கொய்யா ஜுஸ்
ஈ. காய்கறி வேக வைச்ச தண்ணியெல்லாம் சூப்னு சொல்லி அப்பா கொடுக்கிறது.

5. என்றென்றும் இனியவை - கலெக்ஷன்ஸ் ஐந்து
எல்லாவற்றையும் பாதியில் விட்டுவிடும் ஆர்வக் கோளாறான நான், இது நாள் வரை (குறைந்த பட்சம் 5 - அதிகபட்சம் 15 வருடங்களாக) தொடர்ந்து சேகரித்துக் கொண்டிருக்கும் என் கலெக்ஷன்ஸ் :
அ. பென்சில் - அதாவது, "க்ராபைட் மட்டுமே இருக்கா?" என்று கேட்கக் கூடிய அளவு ரொம்பச் சின்ன, கையால் பிடிக்கவும் முடியாத பென்சில்கள் என்னிடம் நிறைய உண்டு.
ஆ. ரப்பர் - எல்லாவிதமான பொம்மை வடிவத்திலும் அழிப்பான்கள். மார்க்கெட்டில் புதிதாக வரும் வடிவங்களையும் உடனுக்குடன் வாங்கிவிடுவேன்.
இ. யானை பொம்மை - இது பற்றி முன்னேயே சொல்லியாயிற்று
ஈ. சிவலிங்கம் - எந்தப் புது சிவன் கோயிலுக்குப் போனாலும் போய் வந்த நினைவாக லிங்கம் வாங்குவது. உலோக லிங்கங்கள்/ பேப்பர் மாஷ் வாங்க மாட்டேன். கல்/மார்பிள் மட்டும் தான். சின்ன லிங்கம், கையடக்கமாக. அதைத் தொட்டுத் தடவிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி.
உ. காதணிகள் - ஒரு ஜோடி பதின்மூன்று ரூபாய்க்குக் கீழ் கிடைக்கும் காதணிகள், பல நிறங்களில், பல வடிவங்களில் வாங்கப் பிடிக்கும். எல்லாம் காலேஜ் நாட்களில் பிடிக்காத விஷயங்கள். வேலைக்கு வந்தபின் ஒரே பைத்தியமாக ஆகி விட்டேன் :)

6. அழைக்கும் நபர்கள் ஆறு:
அ. யோசிங்க - பதிவுலகில் கைப்புள்ள பதிவுக்குப் பின் நான் படித்தது இவரைத் தான். நல்லாத் தான் புதிர் போடறாரு.. நம்ம 'லெவலுக்கு' இல்லை.. அதான் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கிறது :)
ஆ. குப்புசாமி - பங்கு வணிகம், கரையோரம்னு கலக்குறாரு. குப்பு, உங்க கரையோரத்துல புதுச் செடிக்கு விதை கொடுத்தாச்சு.. அப்டியே பிடிச்சு எழுதுங்க!!
இ. ரமணி - அந்நியனாக எனக்கு அறிமுகமாகி அப்படியே (மட்டுறுத்தல்) நண்பரானவர். பதிவுகள் அதிகம் படிக்கவில்லை என்றாலும், டெக்னிகல் சமாச்சாரம் எல்லாம் அலசுறது உண்டு.. (அதாவது, அவர் பேசுவாரு, நான் சும்மா கேட்பேன் :) )
ஈ. நாகை சிவா- சங்கத்துப் புலியைக் கூப்பிடாவிட்டால், யானை மேல பாய்ஞ்சிட்டா?!! அதான் ஹி ஹி!!
உ. பெருசு - பெருவில் உட்கார்ந்து தனியாக வெண்பா எழுதிக் கொண்டிருப்பவர். மறுபடி சங்கத்தவர் - மூத்த மெம்பர்.
ஊ. வவ்வால் - வலைப் பதிவுகளுக்கு வந்ததிலிருந்து எனக்குக் கோபமே வந்ததில்லை என்ற என் எண்ணத்தை முறியடித்த பெருமை முழுவதும் இவருக்கே.. கௌசிகன் பதிவில் கிட்டத் தட்ட ஆட்டோ அனுப்பி விடுவாரோ என்று நான் பயப்படும் அளவுக்கு சீரியஸாக சண்டை போட்ட முதல் பதிவர். அதிலிருந்து யானையும் வவ்வாலும் ரொம்ப ப்ரெண்ட்ஸ் தான். வவ்வால், தலை கீழா நின்னுகிட்டே ஆறு பதிவு போடுங்கய்யா.

இன்னும் நிறைய பேரை அழைக்க ஆசை. ஆனா, இந்த லிஸ்ட்ல இருப்பவர்கள் நான் விரும்பிய ஆட்களை நிச்சயம் அழைத்து விடுவார்கள். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இந்தப் பதிவு இத்தனை நீளமாகப் போனதற்கு மன்னிக்கவும். பொறுமையா படிக்க முடியாதவர்கள்(அதாவது, நான் ரொம்ப பொறுமையைச் சோதிச்சிருந்தா) தங்கள் கண்டனங்களை யாழிசைத் தாத்தாவிற்கு அனுப்பலாம். பார்சல், வி.பி.பி அலவுடு.

50 comments:

நாமக்கல் சிபி said...

//பஸ்ஸோ காரோ, ப்ளேனோ, ரயிலோ.. தொலை தூரப் பயணங்களில் ஜன்னலோரம் அமர்ந்து புத்தகத்தில் ஒரு கண், எதிர் இருக்கைக்காரர்கள் செய்யும்/பேசும் விஷயங்களில் ஒரு கண், ஜன்னல் வழியே தெரியும் உலகில் ஒரு கண், அட அப்பப்போ வரும் தின்பண்டங்களை மறந்துவிட்டேனே :)..//

எத்தனை கண்ணுங்க உங்களுக்கு?

ramachandranusha(உஷா) said...

பொன்ஸ், வவ்வால் கூட போட சண்டையின் லிங்க் அனுப்பவும். பழங்கஞ்சியானாலும் பரவாயில்லை. கொஞ்ச நாளா வலையில யாருமே சண்டையே போடலையா? போர் அடிக்குது :-)

குமரன் (Kumaran) said...

குறையொன்றுமில்லை பாடலைத் தான் அடுத்து 'கேட்டதில் பிடித்தது' பதிவில் போடலாம் என்று இருக்கிறேன். நீங்கள் பாடி பதிவு செஞ்சு அனுப்புங்க. எப்படி இருக்குன்னு பாக்கறேன். :-)

http://koodal1.blogspot.com/2005/10/blog-post_15.html

ரிஷி said...

nice List.

நாமக்கல் சிபி said...

//நீங்கள் பாடி பதிவு செஞ்சு அனுப்புங்க. எப்படி இருக்குன்னு பாக்கறேன்//

பதிவுலகினரின் பகையைச் சம்பாதித்துக் கொள்ள குமரன் தயாராகி விட்டார் என்பதையே இது காட்டுகிறது!

:)

பொன்ஸ்~~Poorna said...

சிபி, எனக்கு ரெண்டு கண்ணு, என்னோட கண்ணாடில ரெண்டு கண்ணு, ஆக நாலு.. நாலாவது கண்ணு தூங்கிகிட்டு இருக்கும்.. பிக்சர்ல வராது ;)

உஷா, உங்களுக்குப் போர் அடிச்சா நாங்க சண்டை போடணுமா? ஓவராத் தெரியலை உங்களுக்கு? :) வவ்வால், ஆட்டோவை அங்க அனுப்பிட்டாரா என்னன்னு தெரியலை, கௌசிகனையும் காணோம், அவரோட வலைப் பூவையும் காணோம். வலைப் பதிவுல இன்னிக்கு நடக்கும் சண்டைகள் ரேஞ்சுக்கு அதெல்லாம் ஜுஜுபி...

குமரன், சாரி, என் பாட்டு எனக்கு மட்டும் தான்.. பாடிப் பதிவு பண்றதெல்லாம் இல்லை..

Thanks Rishi

Thekkikattan|தெகா said...

//அட அப்பப்போ வரும் தின்பண்டங்களை மறந்துவிட்டேனே//

அதானே பார்த்தேன், ஏதோ மிஸ் ஆகிறமாதிரி இருக்கேன்னு... நல்ல வேளை லிஸ்ட்லெ சேர்த்துகிட்டீங்க... இல்லென்னா நான் பலாச் சொளை(?), வெள்ளிரிக்காய், முறுக்கு, சீடை, எளனி, அப்படின்னு ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்துருப்பேன், உங்களுக்காக

இப்பத்தான் பிரியுது எனக்கு, என்ன நடந்துருக்குன்னே... தெகா சரியான ஒரு ஓட்டை வாயி... உங்க இனியவை ஆறுலெ இடம் பெற முடியாமல் ஃபெயில் ஆகிட்டேன், ஜஸ்ட் 2 மார்க்கிலெ ;-))

ALIF AHAMED said...

வ வா சங்கதிற்க்கு அனானி எழுதுவது என்னுடைய இரன்டு பின்னுட்டம் நிரா கரிக்க பட்டது எதனால் "டோன்டு" "முகமூடி" "ராபின் கூட்" "பெயரிலி" போன்று அதுவும் ஒரு பெயர் .

குறிப்பு: 1
வருத்தபடாத சங்கம் என்று பெயர் வைத்து கொன்டு வருத்தபடாத வருத்தபடலமா?

குறிப்பு: 2
எனது பெயரை வழிபோக்கன் என்று மாற்றிவிட்டென்

குறிப்பு 3
நகல் : பிகிலு பொன்ஸ் ,இளா , தல , தளபதி ,ஜொள்ளூ பான்டி

தருமி said...

கொய்யா ஜுஸ்- அப்படி ஓண்ணு இருக்கா? ரெசிப்பி அனுப்புங்களேன்.
" காய்கறி வேகவச்ச தண்ணியெல்லாம் சூப்னு சொல்லி அப்பா கொடுக்கிறது."// அப்பா செஞ்சு குடுத்தா உங்களுக்கு அந்த மவுசே தெரியறது இல்லை.

அந்த கம்மல் விவகாரம் - என் சின்னுப் பொண்ணு மாதிரி போல

பொன்ஸ்~~Poorna said...

தெகா, எனக்கு இன்னும் புரியலை நீங்க ஏன் வருத்தப் படறீங்கன்னு.. நீங்க கொஞ்சம் பழைய பதிவராச்சேன்னு கூப்பிடத் தயக்கமா இருந்தது.. யாராவது கூப்பிடுவாங்க.. என்னோட அருமை நண்பர்(???!) வவ்வால் கண்டிப்பாக் கூப்பிடுவார் பாருங்க.. பின்ன, நீங்களும் மிருக ப்ரியர் ஆச்சே.

அனானி, சங்கம்னு இருந்தா ஒரு கொள்கை கூட இல்லைன்னா எப்படி? இதுக்கெல்லாம் போய் வருத்தப் படலாமா? ஆமாம், உங்க பேரை எப்படிக் கூப்பிட? இப்போ நாளைக்கே வேற ஒரு நிஜ அனானி வந்து பின்னூட்டினா. அப்போ என்ன, ப்ளாக்கர் அக்கவுன்ட் அனானி, அக்கவுன்ட்லெஸ் அனானின்னா கூப்பிட முடியும்? வழிப்போக்கன்னு ஏற்கனவே ஒருத்தர் இருக்காரு.. குலுக்கிப் போட்டு வேற பேரு எடுங்க!!

நாமக்கல் சிபி said...

//இப்பத்தான் பிரியுது எனக்கு, என்ன நடந்துருக்குன்னே... தெகா சரியான ஒரு ஓட்டை வாயி... உங்க இனியவை ஆறுலெ இடம் பெற முடியாமல் ஃபெயில் ஆகிட்டேன், ஜஸ்ட் 2 மார்க்கிலெ //

தெகா! நீங்க ஃபெயிலெல்லாம் ஆகலை! என் வாய்ப்பு வரும்போது நான்தான் உங்களைக் கூப்பிடுவேன்னு துண்டு போட்டு (அதாங்க நீங்க சொன்ன ரிசர்வேஷன்) வெச்சிருக்கேன்.

(அது சரி! உங்களை யாரு கூப்பிட்டான்னு நீங்க சன்னமா என்னைப் பாத்து முனகுறா மாதிரி இருக்கே...)

Thekkikattan|தெகா said...

//தெகா, எனக்கு இன்னும் புரியலை நீங்க ஏன் வருத்தப் படறீங்கன்னு.. //

பாத்தீங்களா நான் சும்மனாச்சுக்கும் வாரிவிட்ட நீங்க சீரியாச எடுத்துக்கிட்டீங்க, வருத்தப் படுற அளவுக்கு ஓண்ணும் நடந்துறலேயே... சும்மா கிண்டல் பண்ணி பார்தேனுங்க பொன்ஸூவோ :-)

பொன்ஸ்~~Poorna said...

தருமி, கொய்யா ஜூஸ் ரெசிபி தெரியாது.. "Real Juice" அது.. கடைல கிடைக்கும். நல்லா இருக்கும்
//அப்பா செஞ்சு குடுத்தா உங்களுக்கு அந்த மவுசே தெரியறது இல்லை.//
ஆமாம் ஆமாம், அப்பா செஞ்சி கொடுக்கிறதால தான் சாப்பிடறதே.(என்ன செய்யறாரு?!, சும்மா டம்ப்ளர்ல விட்டுக் கொடுப்பாரு.. உப்பு காரம் கூட நானே போட்டுக்குவேன்.. எங்கப்பா ஒரு 5-ஸ்டார் செப்பாக்கும் ;) )

தெகா, உங்களுக்குக் கிண்டல் பண்ணவும் தெரியுமா? சிபி, நல்லாத் தான் ட்ரெயின் பண்ணி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் :)

Thekkikattan|தெகா said...

/அது சரி! உங்களை யாரு கூப்பிட்டான்னு நீங்க சன்னமா என்னைப் பாத்து முனகுறா மாதிரி...//

கரெக்கட்டா கண்டுபிடிச்சுட்டீங்க போங்க, ஹி...ஹி..ஹி. சும்மா ஓரமா நின்னு ரெஃப்ரி பண்ணனும்...

துண்டு போட்டு எனக்கு யாருக்கு இந்த தெகாவுக்கு... நாய்ங்கெ:)ல்லாம் சும்மா லாப்டாப்-யெ பேருந்துலெ தூக்கி ஜன்னல் வழியெ போட்டு சீட்டு போட்டவய்ங்காளாக்கும்... துண்டு போடுறாம் துண்டு கால்னா காசு துண்டு ;-) (நமக்குள்ளெ என்ன சிபி... சும்மா லூஸ்லெ வுடுங்க:-))

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்,

நான் ஆறு என்று பார்த்ததும் ஏதாவது சினிமா சம்பந்தப்பட்டதாக இருக்குனும்னு ஒடி வந்தேன் இப்போ படத்துக்கு தானே இப்படி ஆறு, 6.2 என்றெல்லாம் பெயர் வைக்கிறாங்க!

நாலு ,ஆறுனு விளையாட்டெல்லாம் நல்லா இருக்கே பலே பலேனு படிச்சுட்டு வந்தா கடைசில என் பெயரையும் போட்டு பேதி மாத்திரை தந்துடிங்க :-))

எனது பெயரையும் குறிப்பிட்டு கொஞ்சம் வெளிச்சம் தந்தமைக்கு அழுதுகிட்டே சிரிச்சுகிட்டு நன்றி சொல்கிறேன் :-)
(அது ஆனத்த கண்ணீர்!)

நான் பேருந்தில் என்று இல்லை சினிமா தியேட்டர் போனால் கூட கையில் ஒரு வாரப்பத்திரிக்கையாவது இருக்கும் இடைவேளையில் மங்கலான வெளிச்சத்திலும் படிப்பேன். வெயில் நேரத்தில் படிக்க பிடிக்குமா , உடம்ப்பும் ,மனசும் கூலா இருந்தா தானே படிக்க பிடிக்கும்.நான் இரவில் தான் படிப்பேன்,நல்ல புத்தகம் எனில் விடிய விடிய படித்து முடித்துவிடுவேன்!

ஒரு கோ.இன்சிடென்ட் என்று சொல்லலாம்,வெளிகண்ட நாதரின் பதிவில் சில ஸ்டாண்டர்டு பின்னூட்டங்கள்னு பின்னூட்டம் போட்டபோது கெளசிகன் பற்றி இன்று தான் நினைத்தேன் ஆளே காணொமே ஒரு வேளை நம்ம தொல்லை தாங்காம தானோனு . இங்கே வந்து பார்த்தா நீங்களும் அவரையே பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.மனிதர் நெட் இல்லாத ஏதேனும் அத்துவானக்காட்டில் போய் மாட்டிக்கொண்டர் போல் உள்ளது!

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால்,
//பலே பலேனு படிச்சுட்டு வந்தா கடைசில என் பெயரையும் போட்டு பேதி மாத்திரை தந்துடிங்க :-))//
:)))

// நான் பேருந்தில் என்று இல்லை சினிமா தியேட்டர் போனால் கூட கையில் ஒரு வாரப்பத்திரிக்கையாவது இருக்கும் இடைவேளையில் மங்கலான வெளிச்சத்திலும் படிப்பேன். //
ஐயோ ஐயோ ஐயோ.. நமக்குள்ள இவ்வளவு ஒற்றுமையா.. கண்ணாடி போட்டது எப்படிங்கிறீங்க?!!!

// வெயில் நேரத்தில் படிக்க பிடிக்குமா , உடம்ப்பும் ,மனசும் கூலா இருந்தா தானே படிக்க பிடிக்கும்.//
ஆனா எனக்கு கூல், ஹாட் எல்லாம் பெரிய விஷயம் இல்லை.. பஞ்சு மிட்டாய் சுத்தித் தரும் பேப்பரைக் கூடப் பிரிச்சு படிப்பேன்.. தெலுங்கில் இருந்தாக் கூட படம் பார்ப்பேன்.. அத்தனை படிப்பாளி ;)

வர வர நிறைய கோ இன்சிடென்ட் நடக்குது.. என்ன பண்ண ? :) வெ.க.நா பதிவுல உங்க பின்னூட்டத்துக்குக் கொஞ்சம் பிற்சேர்க்கை போடலாமான்னு பார்த்தேன்.. ஆனா, நம்ம பின்னூட்டமே ஒரு பதிவளவுக்குப் போய்ட்டதால விட்டுட்டேன் :)

அப்புறம் நீங்க கூப்பிடும் போது இந்த தெகா, எஸ்கே எல்லாம் விட்டுறாதீங்க :)

Unknown said...

ஆகா.. மாட்டி விட்டுட்டீங்களே மகாராணி.. ஆனாலும் முன்னாடியே சொல்லிட்டதால பரவாயில்லை. கொஞ்சம் ரசத்தோட (முடிஞ்சா சாம்பார், கறியோட) எழுத முயற்சிசெய்யப்போறதால 1,2 நாள் ஆகலாம். பொறுத்துக்கணும்.

VSK said...

இந்த அமிதாப் பச்சன் ரின்[??] விளம்பரத்துல வர்றமாதிரி,

"நான் கேட்டேனா?"

எதுக்குங்க என்னையெல்லாம் இழுத்து விடறீங்க!?

ஆனா, நீங்க சொல்றதுக்கு முன்னாடியே உங்களுக்கு 4 கண்ணுன்னு தெரியும்!

பொன்ஸுக்கு 2 ; யானைக்கு 2
ஆக மொத்தம் 4!

எப்படியோ, இந்த 6 பதிவை எப்படிப் போடணும்னு ஒரு வகை அமைச்சுக் கொடுத்திட்டீங்க!

மத்தவங்க எப்படி சொதப்பறாங்க, இல்லை, மாத்தறாங்கன்னு பார்ப்போம்!

ஆறு மனமே ஆறு!
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!

Unknown said...

சொல்லனும்னு நினைச்சு மறந்துட்டேன். என்ன நீங்க.. அமெரிக்கா வந்தப்புறமும் ரப்பர்னு எல்லாம் சொல்லிக்கிட்டு. மேட்டர் தெரியாதா ;-) அழகா எரேசர்னு சொல்லனும்.

பொன்ஸ்~~Poorna said...

எஸ்கே, உங்களுக்குத் தெரியாத மேட்டர் ஏதாச்சும் இருக்குங்கறீங்க?! எல்லாத்தையும் சரியாத்தான் கண்டுபிடிக்கிறீங்க!! ஆறு பதிவை எப்படி வேணும்னாலும் போடலாம்.. யாழிசையின் பதிவையும் பார்த்து வையுங்க.. :)

ரமணி, பொறுமையாவே எழுதுங்க.. அப்புறம், நாங்க இந்த மஞ்சாப் பையோட அமெரிக்கா வந்தவங்க.. இப்படித்தான் ரப்பர், பலப்பம்னு பேசுவோம்.. அட்ஜீஸ்ட் அட்ஜீஸ்ட் :)

ALIF AHAMED said...

இப்போ நம்ம பேரு மின்னுது மின்னல்

இப்படிக்கு

அனானி

இது ஓக்கேவா

இந்த பெயரில் வேறயருமில்லையே??

பொன்ஸ்~~Poorna said...

மின்னல், பேரு நல்லாருக்கு.. அப்படியே மின்னிகிட்டு இருங்க.. பதிவுலகத்துக்கு மின்னலை வரவேற்கிறேன்.. :)

Unknown said...

4 பதிவு தமிழ்மணத்துல ஒரு ரவுண்டு வந்துச்சு.இப்ப ஆறா..ஓக்கே நடத்துங்க..நடத்துங்க

ராபின் ஹூட் said...

யாருய்யா என் பேர அனானி லிஸ்டுலே சேத்தது? சீக்கிரம் என் படத்தையும் வலையேத்திடுரேன்.

யானை இந்தியாவுல பல இடத்துல சுத்திட்டு இப்ப புதரகத்துல சுத்திக்கிட்டு இருக்குது போல. யானைக்குக் கரும்பு வேணும்முன்னா எங்க ஊருக்கு வரட்டும்.

பொன்ஸ்~~Poorna said...

செல்வன், என்னோட ஆறு பத்தி ஒண்ணுமே சொல்லாம போய்ட்டீங்களே!!

ராபின், உங்களுக்கு எந்த ஊரு? அதைச் சொன்னீங்கன்னா வந்துருவேன் கரும்பு வேற தரென்னு சொல்றீங்க.. //யாருய்யா என் பேர அனானி லிஸ்டுலே சேத்தது?// தெரியாம போச்சே தெரிஞ்சிருந்தா, அனானிகள் ஆறுன்னு லிஸ்ட்ல சேர்த்திருக்கலாம் :)

ராபின் ஹூட் said...

மச்சான் ஊரு மதுர, நீ நின்னு பாரு எதிர

துளசி கோபால் said...

// எல்லாம் காலேஜ் நாட்களில் பிடிக்காத விஷயங்கள். வேலைக்கு வந்தபின்
ஒரே பைத்தியமாக ஆகி விட்டேன் :) //

ஆமாமா, இப்ப சொந்த சம்பாத்தியமாச்சே?:-))))

பொன்ஸ்~~Poorna said...

ராபின், நீங்க மதுரையா, சரி தான்.. அதைவிட எங்க இளையதளபதி பாட்டா எடுத்துச் சொன்னீங்க பாருங்க, நல்லா இருங்க!அனானின்னு சொன்னதை இப்போவே வாபஸ் வாங்கிக்கிறேன்.. :)

//ஆமாமா, இப்ப சொந்த சம்பாத்தியமாச்சே?:-)))) //
கரெக்டுக்கா.. அந்தக் காரணம்தான் :)

ராபின் ஹூட் said...

சொன்ன சொல்லக் காப்பாத்துவான் இந்த ராபின். போட்டோவ வலையேத்தியாச்சு. பதிவுல பாத்து மகிழ்க.

Unknown said...

ஆபிஸ்ல இருந்தேங்க.அதான் அப்ப விரிவா பதில் போட முடியலை

"குறை ஒன்றும் இல்லை" பாட்டை வாழ்க்கையில் மறக்கவே முடியாது.பர்சனல் விஷயம் வலைபதிவில் பேசுவதில்லை என்பதால் ஏன்னு சொல்ல முடியாது.:-))

குறைஒன்றுமில்லைன்னு ஒரு புஸ்தகம் இருக்கு.அது அருமையா இருக்கும்.

வாட்டாநல்லூர்ன்னு ஊர் சொன்னீங்க இல்லை?எனக்கு அந்த மாதிரி கிராமத்தில் தங்கி பழக்கமே இல்லை.எல்லா சொந்தக்காரங்களும் கோவை நகரிலேயே இருந்தாங்க.மாமா மட்டும் வெளியூர் அதுவும் நகரம்.கோவை சிடி லிமிட் தாண்டி எந்த சொந்தமும் இல்லை.:-(((((

ஹைதராபாத் போயி 3 நாள் தங்கினேன்.சப்தர்ஜங் பேலஸ் கடிகாரம் அருமையா இருந்துச்சு.மியூசியமும் நல்லா இருந்துச்சு.ஆனா ஹைதராபாத்தை விட வழியில் பார்த்த ரூரல் ஆந்திரா தான் பிடிச்சது.ரயில் போகும் வழியில் தெனாலின்னு ஒரு ஊரு இருந்துச்சு."தெனாலி ராமன் ஊருன்னு" சொல்லி சொல்லி மாஞ்சுபோயிட்டேன்.

கொய்யா ஜூஸ் பிடிக்குமா?அட ராமா.......சரி...விடமின் சி இருக்கும்.ஆனா பச்சை கொய்யாவை மிளகாபொடி தொட்டு சாப்பிடும் சந்தோஷம் வருமா என்ன?

யோசிப்பவர் said...

பதினோரு மணி வெயிலா! அது உங்க சொந்த ஊர்ல வேணா அப்படியிருக்கலாம். சென்னையில் மண்டை காய்ந்து விடாது? இப்போதான் புரியுது. நம்ம வலைத்துக்குக்கெல்லாம் ஏன் அடிக்கடி வர்ரீஙன்னு!!!;-)

- யெஸ்.பாலபாரதி said...

நல்லா இருக்கு...
உங்க பாட்டிக்கு கூட எம்.எஸ் பாட்டுனா உசுரு தான்.
ஆனால் பதிவின் வடிவம் மாறினதுல சற்றே வருத்தம்.
மற்றவர்களும் இதே பானியில் போனால்..
வாசிக்க அலுப்பு தட்டிவிடும்.
சின்னசின்னதாய் நினைவு வைச்சுக்கிறது எளிமை இல்லையா...
என்னமோ... இளசுகளை புரிஞ்சுக்க முடியலை...
அய்ய... இப்பவே நாலு கண்ணா...
எங்களிருவருக்கும் இன்னும் ரெண்டுகண்னு தான்.
அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///மதியம் பதினோரு மணி வெயிலில், படுத்துக் கொண்டே, படித்துக் கொண்டே தூங்குவது. (வெயில் is a must)///

வெயிலில் படுத்துக் கொண்டே தூங்குவதா? வித்தியாசமா இருக்கு வேர்க்காதா?

கார்திக்வேலு said...

last night hit upon this MS clip on youtube .(Live version)

http://youtube.com/watch?v=H53i7bBuZBo



Was abt to write abt this in my blog , while searching for this song ..hit upon another blogger
mksaravanan who also blogged on this one .

---------
"u exist....but invisible to me ,

Even then I dont have anything to complain"

Divine !!!

EGO is the first and last things anyone need to cross

Makes me feel jealous of ppl who pray in complete surrender to god :-)

(was this song written by Rajaji ??)

- யெஸ்.பாலபாரதி said...

//ஆனால் பதிவின் வடிவம் மாறினதுல சற்றே வருத்தம்.
மற்றவர்களும் இதே பானியில் போனால்..
வாசிக்க அலுப்பு தட்டிவிடும்.//

நான் சொன்னபடியே ஆகிப் போச்சு..
பார்த்தீயா பேத்தி..

பொன்ஸ்~~Poorna said...

வர வர ரொம்ப வேலை செய்யத் தொடங்கிட்டீங்க செல்வன் :) தெனாலி, நம்ம தெனாலி ராமன் ஊரு தான்.. அடிக்கடி அந்த ஊரை நாங்க தாண்டிப் போவோம்.. கொய்யாக்காய் பிடிக்காது.. அதான் ஜூஸ் :)

யோசிங்க்ஸ், சென்னை வெயில் தான்.. ரொம்ப வெயில் இல்லை.. கொஞ்சமா வெயில் அடிக்கிற ரூம்..அவ்வளவு தான் :)

யாழிசை தாத்தா, ஒரே மாதிரி எழுதினா ரொம்ப போர்.. அதான்.. கொஞ்சம் வித்தியாசமா எழுதிப் பார்த்தேன்.. எல்லாத்தையும் வெண்பாவா எழுதலாம்னு ஒரு எண்ணம் இருந்தது.. அதை விட இது பரவாயில்லை தானே ;)

பொன்ஸ்~~Poorna said...

சிங்கை நாதன், 13 ரூபாய்க்குக் கிழே இருப்பது தான் வாங்குவேன்னு சொல்லியே ஒரு ஐநூறு ரூபாய்க்கு வாங்கி இருப்பேன் மொத்தமா.. இன்னும் பட்ஜெட்டை அதிகப் படுத்தினா, அதை விட தங்கம்/வெள்ளியே வாங்கலாம்னு எதிர்ப்பு கிளம்பும்..அதான் :)

செந்தில் குமரன், முதல்லயே சொல்லிருக்கேன் பாருங்க.. நம்ம எல்லாம் சென்னைக்காரங்க.. வெயில் இல்லைன்னா முடியாது.. இங்க வந்து முதல் ரெண்டு நாளைக்கு வெயில் இல்லாம கொஞ்சம் கஷ்டமாய்டுச்சு :)

கார்த்திக், இது ராஜாஜி பாட்டு தான்.. நீங்க சொல்வது போல் இந்தப் பாட்டோட கருத்து ரொம்ப நல்ல கருத்து.. அதான் பிடிக்கும்.. பாடப் பாட / கேட்கக் கேட்க, கொஞ்சம் கொஞ்சமா, நமக்கும் அந்த ராகத்திலயும் வார்த்தைகளினாலும் ஒரு complete சரணாகதி feeling வந்துரும்..

தாணு said...

இந்த தொங்கட்டான் சேர்க்கிற புத்தி பொட்டப் புள்ளைங்களுக்கு போகவே போகாதா? சென்னை போகும்போது என் மகளுக்கு பாண்டிபஜார் முழுக்க அலைந்து வித விதமா ( உங்க பட்ஜட் தாந் 10 ரூபாய் தாண்டாமல்) வாங்க வேண்டியது எனக்கிடப்படும் வேலை!!

நாகை சிவா said...

//சங்கத்துப் புலியைக் கூப்பிடாவிட்டால், யானை மேல பாய்ஞ்சிட்டா?!! அதான் ஹி ஹி!!//
பொன்ஸ், பயத்துல தான் என்னை விளையாட்டுக்கு கூப்பிட்டீங்களா. பாசத்துல கூப்பிட்டீங்கள் என தப்பாக நினைத்து விட்டேன். அதனால நோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//"குறையொன்றும் இல்லை". //
மனதை உருக்கும் குரல், இசை என்று சொல்வார்க்களே, அதற்கு இந்த பாடலை விட வேறு உதாரணம் ஏதும் கிடையாது என்பது என் கருத்து. நான் என் தொடைதட்டியை Login செய்யும் போது எல்லாம் இந்த பாடல் அதுவாக பாடும் படி செய்து உள்ளேன்.

நாளை நானும் என் பதிவை போட்டு விடுகின்றேன். அழைத்தமைக்கு நன்றி.

நீங்க மன்னார்க்குடி மாபியாவ... தஞ்சை தரணி சேர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சி.

நாகை சிவா said...

//விளையாட்டை எனக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாற்றி விட்டேன்..//1,2,3,4,5,6
குமுதம் பத்திரிக்கை விடாமல் படிப்பீர்க்கள் போல......

ALIF AHAMED said...

ம் பழசெல்லாம் ஞபகத்துக்கு வருது அது ஒரு கனா காலம்

பரத் said...

ஹை நீங்களும் புனே ல இருந்தீங்களா?

ராபின் ஹூட் said...

புதரரசியே, சங்கத்துல சேருரதுக்கு எனக்குத் தகுதியிருக்கான்னு பாத்துச் சொல்லுங்க.

ALIF AHAMED said...

ம் பழசெல்லாம் ஞபகத்துக்கு வருது அது ஒரு கனா காலம்

he he he ::)))

with photo

பெருசு said...

தரணியில் ஆறுபோட்ட ழைத்ததங் கக்காவின்
பரணியில் ஏறுபோலே நடையழகு பயின்றெம்மை
நேரந்தான் இல்லாக்கா லையிரவு சங்கத்தில்
சேரத்தான் அறிந்தேனே (e-)கலப்பை.

பொன்ஸ்~~Poorna said...

தாணு,
//இந்த தொங்கட்டான் சேர்க்கிற புத்தி பொட்டப் புள்ளைங்களுக்கு போகவே போகாதா//
அடுத்தத் தலைமுறைக்குச் சேர்க்கறோங்க.. போட்டி வந்தா விட்டுடுவோமே!! :)

நீங்க பரவாயில்லை.. எங்க அம்மாவுக்கும் இப்படி ட்ரெயினிங் கொடுக்கணும்..

சிவா,
ஆமாம் சாமி.. நாங்க மன்னார்குடி மாபியா தான் :) எங்கப்பா நாகையிலும் இருந்திருக்காரு.. நமக்கும் நாகைக்கும் ஒரே சம்பந்தம் சிவா மட்டும் தான் ;)
//குமுதம் பத்திரிக்கை விடாமல் படிப்பீர்க்கள் போல...... //
நாங்க எதைத் தான் படிக்காம இருந்திருக்கோம் :)

பொன்ஸ்~~Poorna said...

மின்னல், வெறுமே முக்கிய அறிக்கை மட்டும் போட்டுகிட்டு இருந்தா, உங்க பழசெல்லாம் நாங்க எப்போ தெரிஞ்சிக்கிறது??:)

ஆமாம் பரத். ப்ராப்பர் பூனா இல்லை, பக்கத்துல மும்பை போகும் வழியில்.

ராபின், அதான் சேர்ந்தாச்சே.. அப்புறம் என்ன? :)

பெருசு, நீங்களும் கடைசியா ட்ரெய்லர் எல்லாம் முடிச்சு மெயின் பிக்சர் போட்டுட்டீங்க. ம்ம்ம்... :)

நாகை சிவா said...

//எங்கப்பா நாகையிலும் இருந்திருக்காரு..//
அப்ப எங்க ஊர் பெருமையை நான் சொல்ல வேண்டியது இல்ல... தானாகவே உங்களுக்கு தெரிந்து இருக்கும்(நல்லவிதமா தானே சொல்லி இருக்கார்). மன்னையையும் ஒரு ரவுண்ட் சுத்தி இருக்கோம். ஆனா நம்ம ஊர் மாதிரி வராது.

பொன்ஸ்~~Poorna said...

டிஸ்கி: ஐம்பதுக்கு ஒண்ணு குறையும் காரணத்தால் இந்தப் பின்னூட்டம் போடப் படவில்லை ஹி ஹி :)

சிவா, உங்க ஊரைப் பத்தி ஒண்ணு ரெண்டு பதிவு போடுறது!! எனக்குத் தெரிஞ்சது கம்மி தான்.. அப்பாவும் சொந்தக் கதை சோகக் கதை மட்டும் தான் சொன்னாரு.. உங்க ஊர்க்கதைன்னா, பொன்னியின் செல்வன்ல படிச்சது மட்டும் தான்..

நாகை சிவா said...

அரை சதத்துக்கு வாழ்த்துக்கள்.
நம்ம ஊரை பத்தி தானே விரைவில் போட்டு விடுவோம்.
எங்க, இந்த பொன்னியின் செல்வன் PDF Formatல் வைச்சி இருக்கீங்களா.