Monday, April 23, 2007

சென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்

சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், "தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?" என்றார்.

"இந்த வெயிலிலா?" என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன்.

சாகரன்
தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து சென்னபட்டினம் குழு சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.

அடுத்து, சிறில் அலெக்ஸ் தேன்கூடு பெட்டகம் பற்றிப் பேசினார். இதெல்லாம் முடிந்த பின்னால் தான் நான் பூங்காவுக்குப் போய்ச் சேர்ந்ததே! ;)

மாற்று! - சிறில்
அடுத்தபடியாக பாஸ்டன் பாலாவை "ஸ்னாப் ஜட்ஜ் ஏன்? எதற்கு?? எப்படி???" என்று கேள்விகளால் துளைத்தோம். மாற்று! பற்றியும் பேச்சு வந்தது. மடை திறந்த வெள்ளம் போல் பேசினார் சிறில். பதிவர் சந்திப்பு நிகழ்ந்த மூன்று மணிநேரமும் முழு உற்சாகத்தோடு சோர்வடையாமல் எந்த தலைப்பானாலும் பேசியது சிறில் அலெக்ஸ் மட்டும் தான்:)

"மாற்று! தளத்தை இன்னும் சம்பிரதாயமாக, விளம்பரப்படுத்தி நிறுவவில்லை" என்பது சிறிலின் எண்ணம். "மாற்று! தளத்தில் பக்கங்களில், இன்னும் அதிக பதிவுகளைக் காட்சிப்படுத்தலாம்" என்றும் சொன்னார்.

வலைபதிவர் உதவிப்பக்கம் - விக்கி
அடுத்தபடியாக, "தமிழ்வலைபதிவர் உதவிப்பக்கத்தின்" செயல்பாடுகள் குறித்து விக்கி பேசினார். "நாமாக விதவிதமாகப் பதிவுகள் இடுவதை விட, பயனர்களின் கேள்விகள் என்று ஏதும் இருந்தால், அவற்றுக்குப் பதில் சொல்லும் விதமான இடுகைகள் இடலாம்" என்று சிறில் சொன்னார். "பதிவர் உதவிக்குழுவைச் சேர்ந்த எல்லாருக்கும் வசதியான ஒரு வாரத்தைத் தேர்ந்தெடுத்து பதிவர் குறைகேட்கும் வாரம் போல எல்லாருக்கும் உள்ள கேள்விகளைச் சேகரிக்கலாம்" என்றேன். எவ்வளவு தூரம் சாத்தியம் என்று பேச வேண்டும்.

ப்ளாக் கேம்ப் : வலைபதிவுக்கும் சமூகத்துக்கும் ஒரு பாலம் - ஓசை செல்லா
ஓசை செல்லா கோவையில் தான் நடத்த திட்டமிட்டிருக்கும் ப்ளாக் கேம்ப் பற்றிப் பேசினார். "வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்" என்றார் செல்லா.

அடுத்து மாற்று!, கூகிள் ரீடர் சேவைகள் குறித்து நான் பேசுவதாக இருந்தது. ஏற்கனவே சிறில் பேசியதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள வசதியான தலைப்பாகையால், ரொம்ப சுலபமாகப் போய்விட்டது.

வலைபதிவுகள் சிந்தனைக் கிட்டங்கியாக வேண்டும்: தருமி
பாதிப் பேச்சுக்களிடையிலேயே புகைக்கப் போன சிலர்(பலர்?) மீண்டு வந்தபின், தருமி தன்னுடைய வலைபதிவு அனுபவங்களைப் பேசினார். பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் இத்தனை விஷயஞானம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பதை வியந்த தருமி, வலைப்பதிவுகளில் உள்ள சிந்தனை ஒரு சிந்தனைக் கிட்டங்கியாக(thinktank), மாற வேண்டும் என்று விரும்பியதாகவும் பல்வேறு விதமான சிந்தனைகள் கலக்கும் இவ்விடத்தில் அதுபோன்ற ஒருமித்த கிட்டங்கி என்பது சாத்தியமில்லை என்று இப்போது உணருவதாகவும் கூறிய போது, வெவ்வேறு எண்ணங்களுடைய வெவ்வேறு சிந்தனைகளின் வெளிப்பாடான இந்த வலைப்பதிவுலகமே சிறந்த கிட்டங்கி என்ற எதிர்க்கருத்து பலரிடமிருந்து வந்தது. ஒரே கருத்தை முன்வைத்து சிந்தனைக் கிட்டங்கி என்று அழைப்பதை விட, பல்வேறு கருத்துக்களும் இருக்குமிடத்தில் வந்து படிப்பவர்கள், எது சரி, எது தவறு என்பதைத் தத்தம் அனுபவங்கள், கல்வி, அறிவு சார்ந்து சிந்தித்து சீர்தூக்கி முடிவெடுப்பதே சரியானதொரு சிந்தனைக் கிட்டங்கியின் செயலாக இருக்கும் என்பதே என்னுடைய கருத்தும்.

அடுத்தபடியாக தருமி சொல்லிய ஒருவிசயம் அமுகவின் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும், பதிந்தே தீரவேண்டும்.. "அனானி முன்னேற்றக் கழகம்னு எல்லாம் சொல்றீங்க, ஆனா, ஒரு பதிவுல கருத்து சொல்லணும்னா, ஏதாவது ஒரு புனைப்பேரோடவாவது வந்து சொல்லுங்க.." என்ற பேராசிரியரின் கருத்துக்கு அமுக தலைகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும், எல்லாரும் அறிந்த புனைப்பெயரில் சொல்லாமல் ஏதோ அந்தச் சந்தர்ப்பத்துக்குத் தோன்றிய ஒரு புனைப்பெயரில் வருவதற்கும், அனானிமஸாக வருவதற்கும் அதிக வித்தியாசம் ஏதும் இல்லையே தருமி? எப்படி இருந்தால் என்ன?

மாணவர்களை வலைபதிவுக்குள் அழைத்துவர வேண்டும்
தருமியின் சிந்தனைக் கிட்டங்கி யோசனையை ஒட்டி, அப்படிச் சமூகத்துக்கும் சென்று சேர வேண்டுமானால், மாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வருவதே வழி என்று விவாதம் திசை திரும்பியது. ஏற்கனவே சிலர் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக பாலபாரதி சொன்னார். "நிறைய பேருக்குத் தமிழில் எழுதலாம் என்பதும், அது இத்தனை சுலபம் என்பதும் தெரியவே இல்லை" என்று ஆதங்கப்பட்ட செல்லா, "கோவையில், ஒவ்வொரு இணைய மையத்தின் வாயிலிலும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், சுரதாவின் எழுத்துரு மாற்றி இவற்றின் உரலை ஒரே ஒரு நாள் ஒட்டியதற்கே ஹிட்ஸ் எகிறியது. இது போன்ற விவரங்கள் அடங்கிய போஸ்டர்களைச் சுலபமாக வடிவமைத்து அவரவர் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள இணைய மையங்களில் ஒட்டி வைக்கலாம். இணைய மையத்தின் பொறுப்பாளர்களுக்கும் இந்த சைட்களை அறிமுகப்படுத்தினாலே பலருக்கும் அவர்களே பரப்பிவிடுவார்கள்" என்றும் சொன்னார்.

மாணவர்களைத் தமிழ்ப் பதிவுலகுக்கு அழைத்துவரும் அளவுக்கு பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று அடுத்த தலைப்புக்குச் சென்றது விவாதம். "என்னுடைய பதிவெல்லாம் மாணவர்கள் படிக்கிற சமாச்சாரமே இல்லை!" என்று சுய வாக்குமூலம் கொடுத்தார் செல்லா. அதையொட்டி சிவக்குமாருக்கும், செல்லாவுக்கும் சின்ன விவாதம் நடந்தது.

சிறுவர் திரட்டி- அனானி
"படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பதிவுகளுக்கு வரவேண்டும் என்று எங்கோ இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறோமே, நம்வீட்டுப் பிள்ளைகளை முதலில் அழைத்துவருவோமே!" என்று நான் கேட்ட போது, "சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது" என்றார் ஓகை. "சிறுவர்களுக்கு என்று தனித் திரட்டி உருவாக்கி, அதை ஓரளவுக்காவது கண்காணித்து வந்தாலொழிய சிறார்களைப் பதிவுலகுக்கு அழைத்து வருவது என்பது எட்டாக்கனி தான்" என்று சொன்னது யார் என்று எனக்கு நினைவில்லை :) ஆனால், சிறுவர் திரட்டி, அதன் கண்காணிப்புக் குழு என்பது மிகவும் ஆரோக்கியமான யோசனையாக தோன்றியது.

எ-கலப்பை குறுந்தகடு இலவச விநியோகம் - ஓகை நடராஜன்
இதற்கிடையே தமிழ் எழுதுகருவிகளைப் பற்றிப் பேசும் போது எகலப்பை போன்ற இலவச கருவிகள் இருப்பது தெரியாமல் விலை கொடுத்து தமிழ்க் கணிமைக்கான மென்பொருளை வாங்குபவர்கள் பற்றிப் பேச்சு எழுந்தது. "எ-கலப்பை போன்ற மென்பொருள் பற்றிய விழிப்புணர்வேற்படுத்த அடுத்த புத்தக கண்காட்சியில் ஏன் இதனை சின்னச் சின்னக் குறுந்தகடுகளாகச் செய்து இலவசமாகத் தரக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார் பாலபாரதி. அப்படிச் செய்தால், அவற்றிற்கான செலவைப் பகிர்ந்து கொள்வதாக உடனுக்குடன் வாக்களித்தார் ஓகை நடராஜன். மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளின் போது இது போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வாக்களித்தார் கௌதம்.

தினமலர், தினத்தந்தி, விகடன், குமுதம் போன்ற தமிழ் ஊடகங்கள் இன்னமும் யூனித் தமிழுக்கு மாறாமல் தனக்கென ஒவ்வொரு விதமான எழுத்துருக்களை வைத்திருப்பதைக் குறித்து இராம.கி ஐயா வருந்தினார். "எப்படியும், நம்மைப் போன்ற நிறைய பதிவர்கள் யூனித்தமிழில் எழுதத் தொடங்கி அதில் பல இணைய பக்கங்கள் வந்துவிட்டால் இவர்களும் மாறிவிடுவார்கள்" என்று கருத்து தெரிவித்தார் மாஹிர்.

இதற்கிடையே மக்கள் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர்களும், குங்குமம் பத்திரிக்கையாளர்களும் வந்து படமெடுத்தார்கள். இன்று காலை 7:30 மணி செய்திகளில் இந்த விவரம் ஒளிபரப்பப்பட்டது.

தருமி பேசி முடித்தவுடன், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சிதறி, தனித்தனியான கலந்துரையாடல்களாகிவிட்டது. சிந்தாநதியின் தமிழ்நாடு டாக் பட்டிமன்றங்களில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற இனியன், நந்தா மற்றும் எனக்கும் வரவேண்டிய பரிசுகளை அளித்தார்கள். தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன் கூட்டம் பல்வேறு பிரிவுகளாகக் கலைந்தது.

தேநீர் சாப்பிடலாம் என்று சொல்லி பின்புற வாயில் வழியாக அழைத்துச் சென்று ஒரு கடையும் இல்லாமல் வெட்டியாக நேரம் செலவழிக்க வைத்த பாலாபாய்க்கு, வழக்கம் போல கண்டனங்களுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

பங்கேற்றவர்கள் விவரங்கள்: (என்னுடைய மொக்கை குறிப்புகளோடு ;) )
1. உங்கள் நண்பன் சரவணன் : இந்த முறை சந்திப்பு கொஞ்சம் புரிகிறாற் போல இருந்தது என்று கடைசியாக வாக்களித்தார். ;)
2. மா. சிவகுமார்
3. தருமி - "தாத்தா முறுக்கெல்லாம் சாப்பிட முடியுமா?" என்று கிண்டல் செய்ததில், சிவக்குமாரின் முறுக்கையும் மிடுக்காகக் கடித்து தூள் பண்ணிவிட்டார்..
4. வினையூக்கி - எப்போதோ வாக்கு கொடுத்த ஐநூறு ரூபாய் நன்கொடை என்னிடம் கொடுக்காததனினால் பல மாதங்களாக சரியாக தூங்காமலிருந்தவர், கடைசியாக நேற்று நன்றாக தூங்கி இருப்பார் என்று நினைக்கிறேன்.
5. ஓகை நடராஜன் - நான் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.. லக்கி சொல்லிட்டாரு ;)
6. ஐகாரஸ் பிரகாஷ்
7. பாஸ்டன் பாலா
8. லியோ சுரேஷ்: இன்னும் வலைபதிவு தொடங்கவில்லை என்றார். ஆனால், நிறைய விசயம் வைத்திருக்கிறார். சீக்கிரமே எழுதுவதாக வாக்களித்திருக்கிறார்.
9. விக்கி
10. சிறில் அலெக்ஸ்: மொதல்லயே சொல்லிட்டேன். சோர்வடையாமல் பேசி முழு உற்சாகத்தோடு நிறைய கருத்துக்கள் பகிர்ந்து கொண்டது சிறில் தான். மக்கள் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டி உட்பட பல விசயங்களை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அழகாக சொல்லிக் கொண்டே இருந்தார்.
11. பாலராஜன் கீதா : இரண்டு நாட்களாக, "பதிவர் சந்திப்புக்கு வாங்க, நினைவு மலர் நீங்க தான் வாங்கிக்கிடணும்" என்று டார்ச்சர் பண்ணிக் கொண்டே இருந்தேன் ;). கடைசியில் நான் லேட்..
12. இராம.கி ஐயா
13. லக்கிலுக்: செக்கச் செவேலென்று ஒரு டீசர்ட் போட்டுவந்து தருமியின் கருப்பு டீசர்ட் பக்கத்தில் நின்று அவ்வப்போது கட்சிப் பாசம் காட்டிக் கொண்டே இருந்தார்.
14. நந்தா: நாமக்கல்லார் வலைபதிவு அப்ரண்டைஸ்களுக்காக நடத்திய வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.
15. உண்மைத் தமிழன்: நான் ஒண்ணும் சொல்றதா இல்லை.. சுகுணா திவாகர் இன்னும் தெளிவாக எழுதிவிட்டார் ;)
16. சுந்தர்: "நினைவு மலர்" என்று கொடுத்ததைச் சரியாக பயன்படுத்தியவர் இவர் ஒருவர் தான். தனக்கு நினைவில் இருக்கத் தேவையான எல்லார் மின் முகவரியும்/தொலைபேசி எண்ணும் வாங்கி அந்தப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொண்டார் ;)
17. ஓசை செல்லா : என்னத்தச் சொல்ல, என்னைப் பாத்து, என்ன்ன்னைப் பாத்து நிறைய மொக்கைன்னுட்டாரு.. செல்லா, நீங்க எங்க தல பாலாவோட போனில் பேசினதே இல்லையா? ;)
18. ப்ரியன்: இப்போதும் கூட நிறையபேர், ப்ரியனையும், விக்கியையும் குழப்பிக் கொள்கிறார்கள். சந்திப்பில் கூட யாரோ இதே போல் அவரிடம் வந்து இவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
19. சு.க்ருபாசங்கர்: மோகன் தாஸுடன் சீரியஸாக கணினி தொழிற்நுட்பங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். இரும்படிக்கும் இடத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துவிட்டு, தலைக்கு எட்டாமல் போகவும் பறந்துவிட்டேன்.
20. மோகன்தாஸ்: அக்கா மீது ஏன் இத்தனை பாசம் என்று எனக்கு இப்பதான் புரியுது ;) தினமும் உங்கள் கூந்தலை அள்ளி முடிந்து விடும் அக்கா மீது அந்தப் பாசம் இல்லாம போகுமா :))) [உடனே பெண்கள் மட்டும் தான் கூந்தல் வளர்க்கணுமா என்று வந்துடாதீங்க, இது ச்ச்சும்மா விளையாட்டுக்குத் தான் :)) ]
21. ஜி.ராகவன் : சீக்கிரமே கிளம்பிவிட்டார், ஜி.ரா வந்ததுக்கே நன்றி சொல்லணும்..
22. முத்து தமிழினி
23. பகுத்தறிவு
24. பொன்ஸ்
25. We the People
26. ஜே கே : சிபியின் நண்பர். இந்தச் சந்திப்பில் பாகசவில் சேர்ந்த கன்னிச்சாமி ;)
27. நாமக்கல் சிபி : புதுப் புது பதிவர்களாக பாகசவில் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்..
28. விஜயராஜ்
29. மாரிக்கனி
30. மாஹிர் : கூகிளிலும் கூட்டாக சாட் செய்வதற்கு ஒரு புதுக் கருவியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தமிழூற்று மாஹிர்.
31. நவீன் பிரகாஷ்
32. தமிழ்வாய்ஸ்
33. 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்
34. யோசிப்பவர்: "ஹிந்தியில் நேரடியாக வலைபதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ப்ளாக்கர் அறிமுகப் படுத்தியிருப்பதை ஏன் தமிழிலும் நாம் செய்ய முடியாது?" என்று கேட்டுக் கொண்டிருந்தார். அத்தனை ஆழமான நுட்ப அறிவு இல்லாததால், க்ருபாசங்கரைக் கைகாட்டிவிட்டேன் ;)
35. நிலாரசிகன்
36. தங்கவேல்: அந்த ஹெல்மெட்டை விடவே மாட்டீங்களா? பூங்கா மண்ணிலும் பாதுகாக்கணுமா?
37. மிதக்கும்வெளி: நடை பாதையில் வாக்கிக் கொண்டிருந்தவர்களைக் கவனித்த அளவுக்கு இவருக்குக் கூட்டம் ரசிக்கவில்லை. சுற்றுப்பாதையில் நடந்து கொண்டிருந்த கருப்பு டிசர்ட் பெண்(இதுலயும் கருப்பா? ;) ) இல்லாமல் இருந்திருந்தால், சீக்கிரமே எஸ்கேப் ஆகி இருப்பார் என்று தோன்றியது ;)
38. செந்தில்
39. WeeBee
40. ஜி. கௌதம்: தொலைக்காட்சிக் குழுவை அழைத்து வந்ததோடல்லாமல், சந்திப்பின் போது "பெண்ணே நீ" பத்திரிக்கை விநியோகத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார் கௌதம்.
41. வடுவூர் குமார்: திடீர் விருந்தினராக வந்து அசத்தியவர் குமார். சிங்கையிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்தாராம்.
42. சார்லஸ்: புதிய பதிவர். அன்புடன், முத்தமிழ்க் குழுமங்களில் ஏற்கனவே சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர்.
43. யெஸ். பாலபாரதி
இது தவிர, மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இட்லிவடை ;), மற்றும் அவ்வப்போது நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கைதட்டி ரசித்துக் கொண்டிருந்த [நிறுத்த வைத்த ;)] அனானிக் கூட்டம் ஒன்று, மொக்கை தாங்காமல் துண்டை விரித்து எங்கள் கூட்டத்திற்கு மிகச் சமீபத்தில் படுத்து உறங்கிய அனானி ஒருவர்.

சந்திப்பின் பொழுது (என்னிடம்) தொலைபேசியவர்கள்:
1. சந்திப்புக்கு வராமல் எஸ்கேப்பான செந்தழல் ரவி
2. 22ஆம் தேதி பதிவர் சந்திப்பு பற்றிய முதல் பதிவு போட்ட அபி அப்பா
3. அமுக அவுஸ்திரேலிய கிளையை முழுக் குத்தகை எடுத்து நடத்தும் பொட்டீக்கடை சத்யா

நிச்சயம் வந்துவிடுவதாக வெள்ளிக்கிழமை கூட உறுதி கூறிய சிவஞானம்ஜி, சிந்தாநதியின் பரிசை வாங்கிக் கொள்ள வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இனியன், தாயகம் திரும்பிய கப்பி பய, முதல் பதிவர் சந்திப்பு என்று குதித்துக் கொண்டிருந்த பிரின்ஸ், "அடுத்த சந்திப்பில் சாகரன் பற்றிப் பேசுவீங்கன்னா, நான் கண்டிப்பா வருவேன்" என்று வெகு நாட்களுக்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்த தேவ், பெங்களூரில் இருந்து வருவதாக சொல்லி இருந்த மகேஸ், இவர்கள் எல்லாம், கடைசி நிமிடம் வரை வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் :((((

34 comments:

வடுவூர் குமார் said...

குடும்பத்தாருக்கு புகைப்படத்தை காண்பித்துவிட்டேன்,நன்றி.

Anonymous said...

இந்தப்படத்துல உள்ள எல்லார் பெரும் போட வேணாம். இராமி.கி ஐயா, சுகுணா திவாகர் அப்புறம் நீங்க எங்க நிக்கிறீங்கனு சொல்ல முடியுமா?

Voice on Wings said...

தகவல்களைத் தொகுத்து வழங்கியதற்கு நன்றி, பொன்ஸ். :)

//தினமலர், தினத்தந்தி, விகடன், குமுதம் போன்ற தமிழ் ஊடகங்கள் இன்னமும் யூனித் தமிழுக்கு மாறாமல் தனக்கென ஒவ்வொரு விதமான எழுத்துருக்களை வைத்திருப்பதைக் குறித்து இராம.கி ஐயா வருந்தினார்.//

இது உண்மையிலேயே வியப்பளிக்கும் செய்திதான். நிச்சயமாக இவ்வாறு கூறியது இராம.கி.தானா?

gulf-tamilan said...

pathivukku nanri!!!

G.Ragavan said...

சந்திப்பு நல்லபடி நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருடனும் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. ஆனாலும் நல்ல கலந்துரையாடல் நடந்தது குறித்து மகிழ்ச்சி.

வெற்றி said...

பொன்ஸ்,
Wow ! 43 பதிவர்கள் கலந்து கொண்டார்களா?
பதிவர்கள் மாநாட்டுச் செய்திகளுக்கு நன்றி. என்ன பாலபாரதி தலை மொட்டை அடிசிருக்கிறாரா?

/* "சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது" */
உண்மை.

துளசி கோபால் said...

சந்திப்பு முடிஞ்சதுலே இருந்து விவரம் வரும் வரும்ன்னு ரெண்டு நாளாக் காத்திருந்தேன்.

நல்லா விவரமா(??!!) எழுதிட்டீங்க. நன்றி.
நிறைய புது முகங்கள் படத்தில். நல்ல விஷயம்.

ஆமாம் சுகுணா திவாகர் க்கு ரெண்டு பிரசண்ட்டா?
மிதக்கறது ஒண்ணு, நடக்கறதுக்கு ஒண்ணா? :-))))))

காட்டாறு said...

நேர்ல பாத்த மாதிரி இருந்தது.

ஓசை செல்லாவின் கருத்து நன்றாக இருக்கிறது....

ஏங்க போட்டோல யாருன்னு விளக்கமா.....

வினையூக்கி said...

//வினையூக்கி - எப்போதோ வாக்கு கொடுத்த ஐநூறு ரூபாய் நன்கொடை என்னிடம் கொடுக்காததனினால் பல மாதங்களாக சரியாக தூங்காமலிருந்தவர், கடைசியாக நேற்று நன்றாக தூங்கி இருப்பார் என்று நினைக்கிறேன்//

:):) :):):):):) :):):):):) :):):):):) :):):):):) :):):):):) :):):):):) :):):)

Jayaprakash Sampath said...

பொன்ஸ், என்னோட வலைப்பதிவு முகவரியை தப்பா போட்டிருக்கீங்க... நான் ப்ளாக்ஸ்பாட்டில் இருந்து வேர்ட்பிரஸ்ஸுக்கு மாறி ரொம்ப நாள் ஆகுது... உரல் இதோ

VoW : ஆமாம்னு நினைக்கிறேன். அவர் சொன்னதிலே, அழுத்தத்தை ' யுனித் தமிழுக்கு' கொடுக்காமல், ' ஒவ்வொரு விதமான என்கோடிங் பாவிக்கிறார்கள்' என்பதற்கு கொடுங்க :-) .. இப்ப க்ளியரா? :-)

SurveySan said...

43ஆ, கலக்கல்.

அடுத்த முறை 100 ஆகட்டும்.

Subbiah Veerappan said...

படத்தில் (In the standing line - from left to right) நான்காவதாக நிற்கும் அன்பரும் சிவப்புக் கலர் சட்டை அணிந்துள்ளார். எட்டாவதாக நிற்கும் அன்பரும் சிவப்புக் கலர் சட்டை அணிந்துள்ளார்.இருவரில் யார் அந்த லக்கான லுக்கார்?

படத்தைக் கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கும்படியாகப் படத்தைப் பதிவிடவில்லையே - சகோதரி!

பொன்ஸ்~~Poorna said...

நன்றி குமார், கல்ப் தமிழன்

அனானி, சமீபத்தில் நடந்ததெல்லாம் தெரிஞ்சும், போட்டோவில் நிற்கிற அளவுக்கு எனக்கு பதிவர்கள் மேல நம்பிக்கை வந்திருக்கும்னு நம்புறீங்களா? மத்தவங்களைப் பொதுவா எங்க சந்திப்புகளில் நாங்க அடையாளம் காட்டுவது கிடையாது. விருப்பமிருந்தா அவங்கவங்க வந்து சொல்லுவாங்க..

VOW, ஆமாம், சமீபத்தைய அவரின் பதிவொன்றிலும் கூட இதைச் சுட்டி இருந்ததாக நினைவு..

ஜி.ரா, அதுக்குள்ள பின்னூட்டம் இடத் தொடங்கிட்டீங்க? ;)

வெற்றி, ஆமாம், தல பாலபாரதி இப்ப மொட்ட பாஸ் ஆகிட்டாரு ;)

துளசிக்கா, நிறைய புதுமுகங்கள் தான் இந்த முறை.. அட்டெண்டென்ஸில் மிதக்கும் வெளி தான், சுகுணான்னு எழுதியது பதிவைச் சுட்ட :) [அந்த ஒரு பிரசண்டே அவருக்கு அதிகம் :))) ]

காட்டாறு, நீங்க வாங்க இங்க அப்ப சொல்றேன் யாரு என்னன்னு :))) காட்டாறு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் வலைபதிவர் சந்திப்பு ஒண்ணு அடுத்த மாசமே ஏற்பாடு செய்துடலாமா? ;)

வினையூக்கி, மறுபடி ஸ்மைலியா? நானே தேவலாம் போலிருக்கே...

பிரகாஷ், மாத்திட்டேன், தேடிச் சேர்த்தது, தப்பா போனதுக்கு ஒரு சாரி :)

சுப்பையா சார், பெரிதாக்கும் விதமாக செய்துவிட்டேன்.. க்ளிக்கிப் பார்க்கலாம் இப்ப..

சர்வேசன், நீங்க வாங்க, ஒரு சர்வேசன் வந்தா, நூறு பேர் வந்தா மாதிரி இல்லியா? ;)

Anonymous said...

எவ்ளோ தெளிவான அழகான பதிவு...நேர்ல இருந்து பாக்குற மாதிரி இருக்கு...சூப்பர்..!!!

சென்ஷி said...

தல என்ன மொட்ட போட்டுட்டாரு :(

டெல்லிய விட ஓவர் வெயிலோ :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்லா விரிவா எழுதி இருக்கீங்க..நன்றி.

தமிழில் எழுதுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினா தமிழ் வலைப்பதிவுகள் தானா வளரும். இந்த விதத்தில் இணைய உலாவு மையங்கள் மூலம் செய்தது நல்ல முன்மாதிரி. அனைவரும் பின்பற்றலாம்.

புத்தக கண்காட்சியில் வெறும் எ-கலப்பை தருவதற்கு பதில் தமிழா! குழுவின் தமிழ் மென்பொருள்கள் அனைத்தையும் தரலாம். தமிழா! குழுவும் நிச்சயம் இதற்கு உதவும். இறுவட்டுக்களை வினியோகிக்க தன்னார்வலர்கள் கிடைத்தால் நன்று.

சிறுவர், மகளிர், மூத்தோர், ஆன்மீகம், கேளிக்கை என்று வருங்காலத்தில் தனித்தனியாக துறைசார்ந்து நிச்சயம் திரட்டிகள் வரும் :) மகளிர் சக்தி ஒரு முன்மாதிரி :)

பதிவர் உதவிப் பக்கத்தில் குறைகேட்கும் வாரம் எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. அவ்வப்போது பதிவர்களுக்குப் பயன்படும் குறிப்புகளைச் சேர்த்து வைத்துக் கொண்டே வாருங்கள்.

இனி எல்லா வலைப்பதிவுச் சந்திப்புக்களுக்கும் நீங்களே அதிகாரப்பூர்வமாக அறிக்கை அளித்தால் நன்றாக இருக்கும் ;)

இராம.கி said...

பறவையொலியாரே!
---------------------
//தினமலர், தினத்தந்தி, விகடன், குமுதம் போன்ற தமிழ் ஊடகங்கள் இன்னமும் யூனித் தமிழுக்கு மாறாமல் தனக்கென ஒவ்வொரு விதமான எழுத்துருக்களை வைத்திருப்பதைக் குறித்து இராம.கி ஐயா வருந்தினார்.//

இது உண்மையிலேயே வியப்பளிக்கும் செய்திதான். நிச்சயமாக இவ்வாறு கூறியது இராம.கி.தானா?
------------------------

அதுதான் பிரகாசு மிகச் சரியாத் திருத்திவிட்டாரே!

"ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறியேற்றம் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள், ஓர் ஒழுங்கு முறைக்கு வரவில்லை; 10, 15 பேரான இவர்கள் திருந்தவில்லை என்றால், அப்புறம் யாரும் மாறமாட்டார்கள்" என்று மட்டுமே சொன்னேன். "முன்னால் சொன்னதையே மீண்டும் சொல்லுவதில் பலனென்ன?" என்ற எண்ணத்தில், இந்த முறை பொதுச் சந்திப்பில் பெரும்பாலும் மோனமே கடைப் பிடித்தேன். மாறாகத் தனியே சிலருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

இணைய வளர்ச்சியை என்றுமே நாடும்,
இராம.கி.

மிதக்கும்வெளி said...

இந்த பிளாக்கர் மீட்டிங் எப்ப நடந்தது?

ஜே கே | J K said...

எங்க நம்மல பத்தி ஒன்னுமே போடல அப்படினு டென்சன் ஆயிடுச்சு. அப்புறம் கீழ பார்த்த போது பாகச-வில் சேர்ந்தது பத்தி போட்டிருந்தீங்க. மகிழ்ச்சி. இருந்தாலும் நான் இல்லாத புகைப்படத்த போட்டுட்டீங்க...
உர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

ilavanji said...

பொன்ஸ்,

சுவாரசியமான தகவல்கள். நன்றி.

கப்பி | Kappi said...

விரிவாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி!! :)

அடுத்த தபா எப்படியாவது வந்துடறேன் :))

அறிஞர். அ said...

//இனி எல்லா வலைப்பதிவுச் சந்திப்புக்களுக்கும் நீங்களே அதிகாரப்பூர்வமாக அறிக்கை அளித்தால் நன்றாக இருக்கும் ;)//

இதை நான் வழிமொழிகிறேன்.

கண்மணி/kanmani said...

தமிழன் ட்.வி கவரேஜ்ல இருக்கிற ஒரே தாய்க்குலம் நீங்கதானா [வினையூக்கி பக்கத்துல?]பொன்ஸ் அய்யோ முகம் கிளியரா தெரியலயே யூடியூப்ல.

siva gnanamji(#18100882083107547329) said...

"நன்றாக எழுதியுள்ளீர்கள" என்று சம்பிரதாயமாக எழுதினால் கோபம் வரும்...

சந்திப்பிற்கு வர இயலாத நிலையை
ஈடு செய்தது உங்கள் பதிவு!

சிவஞானம்ஜி

பொன்ஸ்~~Poorna said...

செந்தழல் ரவி, இளவஞ்சி, கப்பிபய, மாஹிர், நன்றி

சென்ஷி, தல இல்லப்பா, இப்ப மொட்டை பாஸ் ;)

ரவிசங்கர், எல்லா விவரங்கள் குறித்தும் உங்களின் பின்னூட்டம் தொட்டுப் போகிறது, அதுக்கு ரொம்பவும் நன்றி :) சிறுவர் திரட்டியின் பிரச்சனை, அதில் நம்மைச் சுற்றி இருக்கும் சில வக்கிர மனக்காரர்கள் ஏதும் விஷமம் செய்யாமல் இருக்க 24 மணி நேர கண்காணிப்பு தேவைப்படும். ஏற்கனவே சிறார் போர்னோ இணைய தளங்கள் நிறைய இருப்பதாகக் கேள்வி, நம்ம ஆரோக்கியமான விவாதங்களுக்கும் சிந்தனைகளுக்கும் குழந்தைகளை இங்க அழைத்துவந்துவிட்டு, அனாவசிய விவகாரங்களுக்குள் இழுத்துவிடுவது நல்லதல்லன்னு நினைக்கிறேன்..

இராம. கி ஐயா, VOWவுக்குப் பதிலிட்டமைக்கு நன்றிகள்... என் புரிதலில் ஏதும் பிழை இருந்தாலும் சொல்லுங்க..

சுகுணா, நீங்க வாக்கிங் போகலாமான்னு யோசிக்கத் தொடங்குவதற்கு முன்னமேயே நடந்தது ;)

JK, உங்க பதிவு உரல் கூட கிடைக்கலீங்க.. படம் இருக்கான்னு தெரியலை.. முடிஞ்சா இன்னும் வேற ஏதும் தரேன்.. நீங்களும் ஒரு பதிவு போடுறது, உங்க அனுபவங்களைப் பத்தி..

கண்மணி, படத்துல மட்டுமில்லீங்க, சந்திப்புக்குப் போனதுலயும் ஒரே அக்காக்குலம் நான் தான். [தாய்க்குலம்னா ரொம்ப வயசான மாதிரி தெரியுதில்ல? ;)]

சிஜி, பாருங்க, சந்திப்புக்கு வராததினால, ப்ளாக்கர் கூட கோபமாகி, உங்க ஜியை வெட்டிடுச்சு.. :)

Voice on Wings said...

தெளிவுப் படுத்தியதற்கு நன்றி, இராம.கி.

தங்களது யூனிகோட் எதிர்ப்பு நிலைப்பாட்டைப் பற்றி அறிந்திருந்ததால், எனது வியப்பைச் சற்று வெளிப்படுத்தினேன். என்னதான் குறைகள் இருந்தாலும், அனைவரும் ஒரு ஒழுங்கு முறைக்கு வருவதுதான் சரி என்ற உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பொன்ஸ்.

நல்லாப் புரியற மாதிரி பதிவு போட்டுட்டீங்க.:-)

இந்த பதிவில எல்லாரையும் பார்த்தாச்சு.

யாருனு தான் தெரியலை:-)

//
கண்மணி, படத்துல மட்டுமில்லீங்க, சந்திப்புக்குப் போனதுலயும் ஒரே அக்காக்குலம் நான் தான். [தாய்க்குலம்னா ரொம்ப வயசான மாதிரி தெரியுதில்ல//
இது சூப்பர்.

வினையூக்கி said...

இந்த வலைப்பதிவர் சந்திப்பை நாங்க தூரத்திலேந்து கவனிச்சோம்

ஜெனி & கார்த்தி
:):):):):)

Boston Bala said...

இது நம்ம தகவல் அறிக்கைங்க :)

Blogger Meets - Chennai & New Jersey

Anonymous said...


இரும்படிக்கும் இடத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துவிட்டு, தலைக்கு எட்டாமல் போகவும் பறந்துவிட்டேன்.


அதான் அவ்வளவு தெளிவா 'சும்னாச்சிக்கும் ஒரு இமேஜ் buildupக்கு'ன்னு சொன்னோமே ரெண்டு பேரும். இன்னுமா டெக்னிக்கலா பேசினோம்னு நம்பறீங்க? :-))

விவன்னியன் said...

Eno indha Kutti revathi pettiyodaya linka kodukkanum enru thonriyadhu..indha pathivukku sambandham illai enralum..elloram kutty revathiyaga irukka vediya avasiyamum illai..
http://www.kumudam.com/interviews.php?id=2&strid=1366&stream=1
http://www.kumudam.com/interviews.php?id=2&strid=1366&stream=6

Gnaniyar @ நிலவு நண்பன் said...

எனக்கும் ஒரு மெயில் அனுப்பியிருக்கலாம்ல..நானும் வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம்னு முயற்சிக்கிறேன் முடியலையே ..சே..போங்கப்பா..

வரவனையான் said...

கருப்பு டி சர்ட் இல்லைங்க, இங்கிலிஷ் கிரே... சுகுணா பார்த்தது அவங்க ஆயாவை,,,, ஹிஹிஹி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உங்க நிரல்ல smileyக்குப் பின்னால பின்னணி, சதுரம் இல்லாம வரவழக்கை முடிஞ்சா நல்லா இருக்கும்.