Wednesday, August 30, 2006

இதோ... வந்திட்டேன்......


....
.....
........
............
...................
............................


















தமிழோவியத்தில் பொன்ஸ்..



ஹி ஹி...

Tuesday, August 29, 2006

பூ மலரும் பொழுது



பூ மலரும்
பொழுதுகள்
விசேஷமானவை

தோரணங்கள்
வாத்தியங்கள்
அறிவிப்புகள்
இல்லாமல்

யாரும் பார்க்காத
சில நொடிகளில்
மலர்ந்து விடுகின்றன!

எடுத்துச்
சூட முடியாத போதும்
எல்லா பூக்களுமே
மலரும் பொழுது
அழகுதான்!


Monday, August 28, 2006

காகிதத்தில் கலை வண்ணம்....






சில நேரங்களில்

வளர்ந்து விட்டதற்காக

வருத்தப் படுவதுண்டு..





குழந்தையாக இருக்கும் போதோ
கதைகளில் வரும் ராஜகுமாரர்கள் போல
ஓரிரவில்
வளர்ந்துவிட ஆசை..



பெரியவர்களாகையில்,

மீண்டும் குழந்தையாக ஆசை..


அப்படி ஓர் ஆசை தான் மேலே இருப்பவை..




பிளாஸ்டிக் பிள்ளையார்ஜி!!

சற்றே தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Tuesday, August 22, 2006

எடிட்.. edit.. எடிட்...

பகுதி 1
பகுதி 2

"டீ எங்க வாங்கினது?" என்றேன் கிளாஸின் நிலையைப் பார்த்தபடி.

"ஆரம்பிச்சிட்டாங்கப்பா! எங்க வாங்கினது; எப்படி வாங்கினது; பணம் கொடுத்தா, கிரெடிட் கார்டா எல்லாத்தையும் சொல்லணுமே!!" என்று அலுத்துக் கொண்டான் கோயிந்து

"இல்லை, ஸ்டார்பக்ஸ்ல டீ குடிச்சுட்டு இப்படிப் பட்ட கிளாஸ்ல எல்லாம்.. "

"அம்மணி! அடங்குங்க!! டீ குடிக்கிறதுன்னா குடிங்க.. இல்லைன்னா கிளாஸைக் கீழ வச்சிட்டு பதிலைச் சொல்லுங்க!!" என்ற பாலாவின் கட்டளைக்கிணங்க, கண்ணை மூடிக் கொண்டு குடித்து விட்டு, நிமிர்ந்தேன்.

"ம்ம்.. இப்போ சொல்லுங்க.. மத்தவங்க நம்ம பதிவில் போடும் பின்னூட்டத்தை எப்படி எடிட் செய்வது?" என்றார் பாலா.. கேள்வியை மறக்காமல்.

"உங்க லாகின் வழியா உங்க பக்கத்தைப் பாருங்க. அதில் இருக்கும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு அடியிலும் ஒரு குப்பைத் தொட்டி தெரியும். அதை க்ளிக் பண்ணுங்க."

"ஐய்யோ.. அப்புறம் அழிஞ்சிடுமே.. " என்றான் கோயிந்து.

"இரு இரு.. என்ன அவசரம்? " என்றேன். "இப்போ அந்தப் புதுப் பக்கத்தோட உரல் இப்படி இருக்கும்"

http://www.blogger.com/delete-comment.g?blogID=24180143&postID=115623777191154907

அதுல delete-comment : இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துட்டு post-edit இந்த வார்த்தைகளைப் போடணும்.. அப்புறம் இப்படி வரும்:

http://www.blogger.com/post-edit.g?blogID=24180143&postID=115623777191154907

இந்த உரலை ஒரு முறை தட்டி பக்கத்துக்குப் போகணும். இந்தப் பக்கம் நம்ம ப்ளாக்கரின் புதுப் பதிவு போடும் பக்கம்(Create Post) மாதிரியே இருக்கும்.. ஆனா, எடிட் செய்யும் பகுதியில் பதிவுகளுக்குப் பதில் நீங்க தேர்ந்தெடுத்த பின்னூட்டம் வரும்.. இந்தப் பின்னூட்டத்தை வேண்டிய மாற்றங்கள் செய்து பப்ளிஷ் பட்டனைத் தட்டி வெளியிட வேண்டியது தான்..

ஒரு மரியாதைக்கு, வார்த்தைகள் எடிட் செய்யப் பட்டுள்ளது என்று எழுதுவது நல்லது. "

"இது மாதிரி யார் வேணா, யாரோட பின்னூட்டத்தை வேணா மாத்தலாமா? " என்றார் பாலா

"ஆமாம்.. மாத்தலாம்.." என்றேன்..

தீவிர சிந்தனையிலிருந்த கோயிந்து மெல்லத் தலையாட்டினான்..

"என்ன கோயிந்து? என்ன விஷயம்? " என்றார் பாலா

"இப்போ தான் புரியுது, கொஞ்சம் சீனியர் பதிவர்கள் எல்லாம் ஏன் தன்னோட பின்னூட்டத்தைத் தனியாச் சேமிக்கிறாங்கன்னு!" என்று கோயிந்து சொன்ன போது ப்ளாக் இஞ்ஜினியரின் சிஷ்யன் நிஜமாகவே புத்திசாலி தானோ என்று எனக்கு அடுத்த சந்தேகம் வந்துவிட்டது..

"பொன்ஸ், எனக்கொரு சந்தேகம்" என்றார் பாலா என் சிந்தனையைக் கலைத்து, "நான் தானே உங்களுக்கு ப்ளாக் ஆரம்பித்த புதிதில் தமிழ்மணத்தில் சேருவது பற்றி எல்லாம் சொன்னேன். நீங்க எங்கேர்ந்து இந்த விஷயம் எல்லாம் கத்துகிட்டீங்க?"

"அதுவா பாலா..இந்த வார நட்சத்திரம் தான் சொல்லிக் கொடுத்தார்.. பதிவே போட்டிருக்கார் பாருங்க.. நட்சத்திரத்துக்குத் தான் நன்றி.." என்றேன்..

"ஆமாம், இப்படித் தான் ஒவ்வொருத்தர் கிட்டயா ஒவ்வொண்ணு கத்துகிட்டு தனித் தொடர் போட்டு ஊரை ஏமாத்தறீங்களா? உங்களுக்கு அந்த பின்னூட்டம் அழிக்கிறது எப்படின்னு சொல்லித்தர மாட்டேனாக்கும்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்..

"அட, என்னபா நீ.. உனக்குத் தான் அதெல்லாம் ஒண்ணும் தெரியாதே.. பொன்ஸக்காவை ஏமாத்தி இன்னும் ரெண்டு டெக்னாலஜி கத்துகிட்டு அப்புறமா இப்படி சொல்லிருக்கலாம்ல? " என்று உண்மையை உடைத்து என்னை இன்னும் திகைக்க வைத்தான் கோயிந்து..

[பி.கு: ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் இந்த உரல் மாறுபடும். எனவே ஒவ்வொரு பின்னூட்டத்தையும் பப்ளிஷ் செய்தபின் அதன் உரலைக் கண்டுபிடித்து தான் இந்த மாறுதலைச் செய்ய வேண்டும் ]

பிற்சேர்க்கை: பின்னூட்டங்களில் வந்த வழிமுறைகளில், மாயவரத்தான் சொன்னது இன்னும் கொஞ்சம் சுலபமானதாக இருக்கிறது. இந்தப் பக்கத்திற்குச் சென்று, அங்கிருக்கும் பெட்டியில் டெலிட் கமென்ட் பக்கத்தின் உரலை இட்டால், சுலபமாக பின்னூட்டத்தை மாற்ற முடியும். URL-ஐ மாற்ற முயன்று தப்பு செய்யாமல், இது இன்னும் சுலபம்..

தொடர்ச்சி

Monday, August 21, 2006

பாலபாரதி - இஞ்ஜினியர், தமிழ் வலைப் பதிவுகள்

ப்ளாக் இஞ்ஜினியர் பாலாவிடமிருந்து தப்பித்து ஓடி விடலாம் என்று தான் முதலில் நினைத்தேன் (தப்பியோட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றறிய இங்கு பார்க்கவும்) . ஆனால், அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. கோயிந்துவை வேறு காரியமாக வெளியில் அனுப்பிய பொறியாளர், அடுத்து என்னைக் குறிவைத்தார்.

"பொன்ஸ், உங்களுக்கு இந்த பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கத் தெரியுமா?"

"அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லையே பாலா! ரொம்ப சுலபம். நீங்க உங்க ப்ளாக்குக்குப் போங்க. பின்னுட்டப் பெட்டியில் ஒன்றும் தட்டச்சாமலே, உங்க பெயரையும், கடவுச் சொல்லையும் கொடுங்க. இப்போ ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு அடியிலும், ஒரு குப்பைத் தொட்டி தெரியும் பாருங்க. அதைத் தட்டினா, "பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கவா? , இல்லை அடையாளத்தை விட்டுவைக்கவா?" ன்னு கேட்கும். பதில் சொல்லி அழிங்க.. அவ்வளவு தானே" என்றேன்.

"ஏம்மணி, என்னன்னவோ செய்யுறோம், இது தெரியாதா எனக்கு? உங்க பக்கத்துல இருக்கிற பின்னூட்டத்த அழிங்க, அழிக்காதீங்க. என்ன வேணா செய்யுங்க. அடுத்தவன் பக்கத்துல இருக்கும் உங்க பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கத் தெரியுமா?"

நான் ஒரு நிமிடம் பயந்து போனேன். பாலா நிஜமாவே பெரிய பொறியாளர் தானோ? நான் தான் தப்பா நினைத்திருக்கேனோ.?!!

"எப்படி பாலா செய்வீங்க?" இதைக் கேட்ட போது என் குரல் எனக்கே கேட்கவில்லை.

"அது சொல்றேன். அதுக்கு முந்தி, பின்னூட்டத்தில் ஒரு சில வார்த்தைகளை மட்டும் நல்லா டார்க்கா போடுறீங்களே எப்படி? அதைச் சொல்லுங்க. இதைச் சொல்றேன்" என்றார்.

"சரி, பின்னூட்டத்தில் டைப் பண்ணும் போது, அங்கயும் சில டேக்(tag) இருக்கு. கொஞ்சம் தான்:



இப்போ பின்னூட்டத்தில் பொன்ஸ் - இந்த வார்த்தையைத் தனிச்சுக் காட்டணும்னு வைங்க. இதுக்கு முன்னும் பின்னும்


போடணும். இப்படி:

இப்படிப் போட்டா, இது நல்லா தடியா, தனிச்சுத் தெரியும்..

அடுத்து இந்த வார்த்தைக்கு ஒரு லிங்க் கொடுக்கணும்.. பொன்ஸ் -> இதுக்கு லிங்க்: http://poonspakkangkal.blogspot.com

அப்போ டேக் பயன்படுத்தி இப்படி எழுதணும்:



அப்புறம், ஒரு வார்த்தையைச் சாய்வெழுத்தா எழுதவேணும்னா, பொன்ஸ் இப்படி வரணும்னா, i tag பயன்படுத்தணும்.. இப்படி:


அவ்வளவு தான்.. புரிஞ்சிதா?"

"ஆமாம்.. பெரிய, ராக்கெட் டெக்னாலஜி!! இல்ல, அவ்வளவு பெரிய விஷயம் சொல்லித் தரப் போறேனே, அது உங்களுக்குப் புரியுமான்னு பார்த்தேன். பரவாயில்லை முதல் அடியில் தேறிட்டீங்க..

இன்னும் ஒண்ணு சொல்லுங்க.. நம்ம சரவணன் கேட்கிறாரு, மத்தவங்க அனுப்பும் பின்னூட்டத்தை, பப்ளிஷ் செய்த பிறகோ முன்னாலோ, அதன் வார்த்தைகளை மாற்ற முடியுமா?"

பாலாவின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் கோயிந்து,

"காப்பி வாங்க போனேன், டீ வாங்கி வந்தேன்" என்று பாடிக் கொண்டே வந்தான்.. அவன் கொண்டு வந்த டீயைக் குடித்து விட்டு நான் சொன்ன பதில் நாளை..

[குறிப்பு: இந்தப் பதிவிலேயே பின்னூட்டம் போடுபவர்கள் ஏதேனும் ஒரு டேக்கை முயற்சிக்கலாம்.. வசதியாக இருக்கும் ;) ]

தொடரும்

திருவாளர் கோயிந்தும் அப்பாவி பொன்ஸும்

சென்னைக்கு வந்து நான் எது நடந்துவிடும் என்று பயந்து கொண்டே இருந்தேனோ, அது நடந்தே விட்டது.. ஆம், நேற்று எதேச்சையாக தமிழ் வலைப்பதிவுகளின் ஒரே ப்ளாக் இஞ்சினியரான பாலபாரதியையும் அவரது நண்பர் திருவாளர் கோயிந்தையும் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. போன இடத்தில் ஒரு கணினியும் அகப்படவே திருவாளர் கோயிந்து காலம் நேரம் பார்க்காமல் பதிவு பொறியாளரிடம்(Blog Engineer ;) ) தான் கற்ற வித்தை ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடத் தொடங்கினார்.

முதலில் அத்தனை ஆர்வமாகக் கேட்கவில்லை என்றாலும், பொறியாளரின் பதிவில் இருக்கும் தொட்டால் மட்டுமே தோன்றும் பக்கப்பட்டி (அதாங்க, sidebar) எப்படிப் போடுவது என்னும் ஒரே விஷயம் என் ஆர்வத்தைத் தூண்ட, அதை மட்டுமே தெரிந்து கொள்வதற்காக, பிறவற்றையும் கவனிக்க வேண்டியதாகிவிட்டது.

"அம்மணி பொன்ஸூ, பதிவுல லிங்க் கொடுக்கிறது எப்படின்னு உனக்குத் தெரியுமா?"என்றபடித் தொடங்கினார் கோயிந்து..

"லிங்கா? அதான் எனக்குத் தெரியுமே.. இதோ புது போஸ்ட் அடிக்கும் போது கம்போஸ் மோடு(Compose Mode) க்குப் போய்ட்டு, அதுல எந்த நாலு வார்த்தைக்கு லிங்க் கொடுக்கணுமோ, அதை மட்டும் செலக்ட் பண்ணி, இதோ இந்த பட்டன் இருக்கு பாரு


இதைத் தட்டணும்.. அப்புறம் ஒரு புது விண்டோ வரும்.. அதுல உன்னோட லிங்கைப் போட வேண்டியது தான்.."


"சரி.. அத்த வுடு.. கொஞ்சம் லெட்டர் பெருசாவும், கொஞ்சம் சின்னதாவும் எப்படி மாத்தணும்? அது தெரியுமா?" என்று அடுத்த டெஸ்ட் வைத்தான் கோயிந்து..

இதுவரை அத்தனை ஆர்வமாக பதில் சொல்லாமல் இருந்த நான் இந்தக் கேள்வியில் அதிக உற்சாகத்தோடு சொல்ல ஆரம்பித்தேன்..
"மறுபடி உனக்கு வேண்டிய நாலு வார்த்தையை செலக்ட் பண்ணு.. மேல பாரு Normal Size-னு ஒரு ட்ராப் டவுன் இருக்கு பாரு..."


"என்னாது? ட்ராப்பு.. டவுனா?!! இன்னாது அது?"


"அதாம்பா.. இங்க இருக்குப் பாரு.. "


"இதை எடுத்து உனக்கு வேணுங்கிற சைஸுக்கு மாத்து.. அவ்வளவு தான்.."


"அம்புட்டு தானா?" என்று கோயிந்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே இஞ்சினியர் சார் தனது திடீர் போன் காலை முடித்துக் கொண்டு வந்தார்..


நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எனது ஞானத் தந்தை கோயிந்து நான் ஏதும் பேசும் முன், இஞ்ஜினியர் சாரிடம், "ஏம்பா, ஏதோ, லிங்க் போடுறது எப்படின்னு கத்துக்க சொன்னியே.. இதோ பாரு இப்படித் தான் போடணுமாம்.. " என்றான்..

வாயடைத்து பார்த்துக் கொண்டே இருக்கும் போது அடுத்து சொன்னான்.

"இதைத் தான் நானே முட்டி மோதி கத்துகிட்டேனே, அடுத்து அந்தப் படம் போடுறது எப்படின்னு கொஞ்சம் சொல்லுறது?" என்று..

"அட.. என்ன பொன்ஸ் அப்படிப் பார்க்கறீங்க.. சொன்னேனே.. நம்ம சிஷ்யப் பயல் கோயிந்து.. ரொம்ப புத்திசாலி.." என்று பாலா என்னைப் பார்த்து சொல்ல, நான் எஸ்கேப்..

(பதிவில் லிங்க் போடுவது எப்படி, படம் போடுவது எப்படி என்று சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோயிந்துவைப் பாலாவிடமிருந்து சில நாள் கடத்தி வந்து இந்தத் தொடர்.. வேறு ஏதாவது எனக்குத் தெரிந்த ப்ளாக் விஷயங்கள் கேட்டால், அதையும் சேர்த்துக் கொள்கிறேன்.. :) )



தொடரும்

Friday, August 18, 2006

வாழும் புன்னகை

"அம்மா!, அம்மாஆஆ!!!!"

"என்னடி, வர்றதே லேட்டு, வரும்போதே சத்தம் போட்டுகிட்டு வரே?"

"காய்கறி வாங்கினியா?"

"நேத்து தானே போய் வாங்கி வந்தோம்.. உனக்குக் கூடத் தெரியுமே!!"

"ஆமாம்.. எங்கே இருக்கும்?"

"இதுக்குத் தான் சமையல் ரூம் பக்கம் கொஞ்சமாவது வரணும்ங்கிறது.. காய்கறி ப்ரிட்ஜில தான் இருக்கும்னு கூட தெரியாத ஒரு பொண்ணு.. உன்னைக் கட்டிகிட்டு.. "

"போதும் போதும்.. ப்ரிட்ஜ்ல இருக்கு அவ்வளவு தானே?"

"என்னாச்சு உனக்கு? இப்போ மணி பத்து.. இப்போ போய் சமைக்கப் போறியா? நாளைக்கு ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்து சமைக்கலாம் சரியா?"

"அட..இப்போவே வேணும்மா..."

"என்னம்மா சொல்றே? அமெரிக்கா போய் என் பொண்ணுக்கு சமையல்ல இத்தனை ஆர்வம் வந்துடுச்சா? அடுத்த பொண்ணையும் அனுப்ப வேண்டியது தான்.. கொஞ்சமாவது நான் நிம்மதியா இருக்கலாம்..."

"இல்லைம்மா.. சமைக்க கேட்கலை.. "

"பின்ன?"

"இரு.. சொல்றேன்.. சரி, தக்காளி இருக்கு.. பீன்ஸ் வாங்கலையா?"

"பீன்ஸா? அது எதுக்கு? உனக்குத் தான் பீன்ஸ் பிடிக்காதே!!"

"ம்ச்.. கேள்வி கேட்காதே.. சும்மா.. பீன்ஸ் இல்லையா?.. சரி.. கொத்தவரங்காயாவது இருக்கே.."

"என்ன பண்ணப் போறே?"

"கொஞ்ச நேரம் வேடிக்கை பாரு.. முதல்ல அந்த சேர்லேர்ந்து எழுந்திரு.."

"படுத்தல்டீ நீ.. நிம்மதியா சீரியல் பார்க்க விடுறியா!!!"




"அட.. அழகா இருக்கே.. "

"இரு.. இரு.. காமிரா எடுத்துவரேன்.. கலைச்சிடாதே!!"

"ம்ம்.. இப்போ சொல்லு.. இது என்னது?"

"புன்னகை முகம்.."

"கரெக்ட்... "

"இதுக்குத் தான் பீன்ஸ் தேடினியா?"

"ஆமாம்.. "

"அப்போ பீன்ஸ் தான் புன்னகையா?"

"இல்லைம்மா.. இப்போ கொத்தவரங்காய் தான்.. அதான் பீன்ஸ் கிடைக்கலியே!!"

(தங்கை: உன்னை எல்லாம் பீன்ஸ்னு சொல்றாங்களா? பூசணிக்காய்ன்னு இல்லை சொல்லணும்?)

Saturday, August 12, 2006

பட்ட காலிலேயே படும்



"பட்ட காலிலேயே படும் "

- சென்னையின் இப்போதைய நிலையை வேறு எப்படிச் சொல்வது?

1, 2, 3, 4 : இவற்றைத் தொடர்ந்து நானும் சென்னைக்கு வரும் அறிவிப்பு.


எப்படியும் இப்போ இருக்கும் நிலையில் வந்து சேருவது கஷ்டம் என்று மகிழும் மக்களே, நான் பிரிட்டன் வழியாக வரவில்லை.. எனவே சீக்கிரமே வந்து சேர்ந்துவிட வாய்ப்புகள் உள்ளன.. எச்சரிக்கையாக இருக்கவும்.

பாபாவின் செய்தித் தொகுப்பைப் பார்த்தால், நல்ல adventurous ட்ரிப்பாக இருக்கும் போல் தோன்றுகிறது.. (வரும்போதே என்னை ஒரு மாதிரி பார்த்து, நாலு முறை சோதனை போட்டு அனுப்பினாங்க.. இப்போ சுத்தம் :)

Thursday, August 10, 2006

அருளுக்கு நன்றி!


என்னடா, எல்லாரும் பாலபாரதிக்கும் கௌதம் ஜிக்கும் நன்றி சொல்லிகிட்டிருக்காங்க, இது புது நன்றியா இருக்கேன்னு பார்க்காதீங்க..

குங்குமத்தில் போடப் போகிறோம்னு கௌதம் சொன்ன போதோ,
அச்சில் வந்திருக்குன்னு பாலா அறிவிப்பு பார்த்த போதோ,
"பொன்ஸ் உங்க கவிதை வந்திருக்கு" என்று சிவகுமார் மடல் பார்த்த போதோ ஏற்படாத மகிழ்ச்சி,

அதை அருள் ஸ்கேன் செய்து அனுப்பியதைப் பார்த்த போது எனக்கு பயங்கர சந்தோஷமாகிடுச்சு.

அதான்.. நேரம் இல்லாத நேரத்திலும் இந்த நன்றி போஸ்ட்..

அருள்! நன்றி, நன்றி, நன்றி!

Tuesday, August 08, 2006

கார்ஸ்

"இந்த ஊருக்கு வந்து இந்த ஊர் தியேட்டர் எல்லாம் பார்க்காமயே போனா எப்படி?" என்று கேட்டது போன வாரம் என் நண்பன் செய்த குற்றம்...

திரையரங்குக்குப் போனதும் "என்ன மாதிரி படம் பார்க்கலாம்" என்றான்..

"ஹாரர், க்ரைம், த்ரில்லர், ஆக்ஷன் தவிர எது வேணாலும் பார்க்கலாம்.." அப்பாவியான முகத்துடன் நான் சொல்லவும்,

"அது சரி.." என்றபடி என்னை ஏற இறங்கப் பார்த்தவன், இந்தப் படத்துக்கு டிக்கெட் எடுத்து (குழந்தைக்குப் பாப்கார்னும் வாங்கிக்) கொடுத்துவிட்டு வேறு ஏதோ பேய்ப் படம் பார்க்கப் போய்விட்டான்!!! :(





ஆனால், நான் ரசித்துப் பார்த்தேன். நல்ல படம். அமெரிக்கா முழுக்க நிறைந்திருக்கும் கார்கள் பற்றிய கார்டூன் படம்.

கார்கள் பேசுகின்றன, பாடுகின்றன, ஆடுகின்றன, காதல் செய்கின்றன, கோபப்படுகின்றன, குதிக்கின்றன, அழுகின்றன. ஏன், ரோடு போடுகின்றன, கண்ணாமூச்சி விளையாடுகின்றன... இன்னும் எத்தனையோ..

வண்டுகள், பூச்சிகள் கூடச் சின்னச் சின்ன கார்கள் தான்..

அமெரிக்காவின் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் வாகனமான கார்கள், அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போன இந்த ஊர் தேசிய நெடுஞ்சாலைகளைப் பற்றித் தான் கதையே..




கதா நாயகன் Mc Queen


பிஸ்டன் கப் என்னும் பெருமைக்குரிய கோப்பையைப் பெறுவதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கும் ரேஸ்கார் தான் கதை நாயகன் Mc Queen. இந்தக் கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் கீழ்க்கோடியில் நடக்கிறது. அதிசயமாக இந்த முறை போட்டியில் மூன்று கார்கள் முன்னணியில் வந்துவிட யாருக்குக் கோப்பை என்னும் வழக்கைத் தீர்க்க ஐந்து நாட்களுக்குள் மீண்டும் ஒரு போட்டி நாட்டின் மேல்கோடியில் இருக்கும் எல்லே(Elle) என்னும் ஊரில் வைப்பதாக முடிவு.

இந்த ஐந்து நாட்களுக்குள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், தானே தன் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்று இறுமாந்திருக்கும் நாயக "கார"ன் எப்படி ஒரு சின்னஞ்சிறிய ஊரின் மக்களைப்(கார்களைப்) பார்த்து, புகழ் பணம் அதிகமில்லாத அவர்களின் அன்பைப் புரிந்து திருந்துகிறான் என்பதே கதை.

தமிழில் எத்தனையோ படங்கள் இது மாதிரி பார்த்திருக்கிறோம் என்றாலும் பழகிய கதையைப் புதிய பாத்திரங்கள், புதிய மொழியில் ஏற்றிப் பார்ப்பது இன்னோரு புது அனுபவம்.

ரேஸ் காரின் ஹாலிவுட் ஆக்டிங் காராக ஆவது போன்ற கற்பனைக் கோட்டைகள்; வயலில் தூங்கும் டிராக்டர்களை இந்தக் கார்கள் போய் குறும்புத்தனமாகக் குரலெழுப்பி, எழுப்பிவிடுவது; அந்த டிராக்டர்களுக்குப் பாதுகாவலனான ரோட்ரோலரைக் கண்டு பயந்து ஓடி வருவது; நெடுஞ்சாலையில் இருக்கும் மோட்டல்களைப் போன்ற கார்களுக்கான தங்குமிடங்கள்; முக்கியமாக, கதை நாயகியாக(Sally) வரும் கார் ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே மெல்ல மிதந்தபடி திரும்பும் போது, ஒரு காரின் முகத்தில் அந்தக் கண நேரக் காதலைக் காட்டியிருந்த விதம்; அதற்கு நம் நாயகன் அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்ததையும் அழகாகக் காட்டியிருந்தது.. என்று வெறும் கார்களை வைத்து விளையாடி இருக்கிறார்கள்.

பிக்ஸார் மூவீஸ் Finding Nemo ஏற்கனவே ரசித்துப் பார்த்திருக்கிறேன்.. இந்தப் படமும் அருமை.




நாயகி Sally




படத்துடன் கூட பாடல்கள் அருமை.. இறுதியில் "Finding Yourself" என்னும் பாட்டு வந்துகொண்டிருந்த போது அரங்கில் இருந்த எல்லாரும் வெளியே சென்று விட்டனர். எல்லாரும் போவதைப் பார்த்து நானும் இடத்தை விட்டு எழுத்தேன். ஆனால் பாட்டின் இனிமை ஈர்க்க மீண்டும் வேறு இடத்தில் அமர்ந்துவிட்டேன். (பொதுவாகவே படம் என்றால் கடைசியில் நன்றி போடும் வரை பார்த்து முடிக்க வேண்டும் என்பது என் கொள்கை).

படம் பார்த்துவிட்டு, வெளியில் வந்தால் பார்க்கும் ஒவ்வொரு காருக்கும் "ஏன் கண், வாய் இல்லை?" என்று யோசிக்கத் தோன்றியது. கார்கள், ட்ரக்குகள் எதுவுமே பேசாமல் இருப்பது ரொம்ப அசாதாரணமானது என்னும் உணர்வு விலக ஒரு அரை மணி ஆனது.

படத்தில் வரும் வரலாற்றுப் புகழ்மிக்க அமெரிக்க நெடுஞ்சாலை 66 எங்கள் ஊர் வழியாகத் தான் போகிறது என்று தெரிந்ததும், இந்த வாரம் அதில் படத்தில் வரும் "Historic Route 66" பாட்டையும் போட்டுக் கொண்டு வண்டி ஓட்டிப் பார்த்தது நிச்சயம் மறக்க முடியாத அனுபவம்.. இந்த ஊரில் பிடித்த விஷயம் இந்த ரோடுகள் தான்..











Historic route 66 - ஆற்றலரிசி கை(கண்?)வண்ணத்தில் ;)



ஆரம்பத்தில் என்னைப் பார்த்து மிரண்டவர்கள் கூட இப்போது "ஆபீஸ் போறீங்களா? நானும் வரலாமா?" என்னும் அளவுக்குத் தேறியாகிவிட்டது. படம் வேறு பார்த்த பின், காரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வரவேண்டும் என்னும் எண்ணமே வருத்தமாக இருக்கிறது. நம்ம ஊரிலும் சாலைகள் இத்தனை நன்றாக இருந்தால்?!!..



பாடல்களை இங்கே கேட்கலாம். எல்லாரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். இந்தியா வந்து மீண்டும் தங்கையோடு போய் பார்க்க வேண்டும்.

Thursday, August 03, 2006

ஓசிப் பதிவு

ஆகஸ்ட் முதல் வாரம்: நட்பு வாரம்..
ஆகஸ்ட் முதல் ஞாயிறு: நண்பர்கள் தினம்..


இந்த நண்பர்கள் தின வாழ்த்துக்களை உங்களுக்கு வழங்குவோர்..

வேற யாராவது விட்டுப் போச்சுன்னா சொல்லுங்க.. சேர்த்துடலாம் ;)

பி.கு: ஐம்பதாவது பதிவுக்கு ஏதாச்சும் போடணும்னு யோசிச்சிகிட்டே இருந்தேன். என்ன போடுறதுன்னு தெரியலை. அதான்!!


பதிவு போட விஷயம் இல்லைன்னா என்ன பண்ணுவோம்?!!!

கரெக்ட்.. படம் மாத்திடுவோம்ல..


கொட்டிய பொன்னைக்
கொண்டோடியது
யானை

ஓடிய கால்கள்
ஓய்வெடுக்க வந்தது..
ஆடியபடி..
என் பாய்மரம்..






(இப்படியே மிதந்துகிட்டே ஊருக்குப் போனா நல்லாத் தான் இருக்கும்.. எப்போ போய்ச் சேருறது!!!)


நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Wednesday, August 02, 2006

100%

நானும் ஜோதியில்..

1.

அன்புத் தோழி தயா


2.

நித்தியா

3.

ஜெயந்தி சங்கர்

4.

துளசி கோபால்

5.

ராமசந்திரன் உஷா

6.

ஜெஸிலா

7.

சந்திரவதனா

8.

லிவிங் ஸ்மைல் வித்யா

-- கண்டனங்களுடன்

கண்டுபிடிக்கலாம்.. க்ளூக்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன்..

தேவையானால், பின்னால்..

---விடைகள் சேர்க்கப் பட்டது